- சிவ.ஆ. மலர்விழி ராஜா
குன்றுகள் தோறும் குமரனின் வாசம்.....
குழந்தை வேலனே
குமரா வருக......
கார்த்திகை வாசா
கஜமுகன் நேசா.......
கார்த்திகேயனே
கந்தா வருக..... வருக....!
செந்தூரில் அருளிடும்
செந்தில் நாதா......
செந்தமிழ் குமரா
முருகா வருக....!
ஈசனின் மகனே
ஈஸ்வரி மைந்தா....
திருவடி பணிந்தோம்
திருமுருகா வருக......!
கார்த்திகை பெண்களின் கரங்களில் தவழும்....
கருணை கடலே வருக....வருக.....!
பழநி கிரியின்
மேல்தனில் நின்று......
பக்தருக்கருளும்
பாலனே வருக......!
சுவாமி மலையில்
குருவாய் வந்து....
மந்திரம் அருளிய
சுவாமியே வருக.....!
பழமுதிர் சோலையில்
நாவல் பழம் தந்து
அவ்வையின் அன்பில்
கனிந்த வேலா..... வருக.....!
திருப்பரங்குன்றம்
திருமணக்கோலம்.....
காட்சி தந்து ஆட்சி
செய்யும் அழகா வருக....!
தணிகை மலையில்
வள்ளியை மணந்து
வேலும் மயிலும் துணையென்று
அருளிய....
சுந்தரவேலா வருக......!
வருக.....!
முருகா....வருக.....!
முருகா.....வருக.....!
கந்தா.....வருக......!
வருக.... வருக....!
கருணை கடலே
வருக..... வருக.....!
(சீர்காழியைச் சேர்ந்த சிவ.ஆ.மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
{{comments.comment}}