- சிவ.ஆ. மலர்விழி ராஜா
குன்றுகள் தோறும் குமரனின் வாசம்.....
குழந்தை வேலனே
குமரா வருக......
கார்த்திகை வாசா
கஜமுகன் நேசா.......
கார்த்திகேயனே
கந்தா வருக..... வருக....!
செந்தூரில் அருளிடும்
செந்தில் நாதா......
செந்தமிழ் குமரா
முருகா வருக....!
ஈசனின் மகனே
ஈஸ்வரி மைந்தா....
திருவடி பணிந்தோம்
திருமுருகா வருக......!
கார்த்திகை பெண்களின் கரங்களில் தவழும்....
கருணை கடலே வருக....வருக.....!
பழநி கிரியின்
மேல்தனில் நின்று......
பக்தருக்கருளும்
பாலனே வருக......!
சுவாமி மலையில்
குருவாய் வந்து....
மந்திரம் அருளிய
சுவாமியே வருக.....!
பழமுதிர் சோலையில்
நாவல் பழம் தந்து
அவ்வையின் அன்பில்
கனிந்த வேலா..... வருக.....!
திருப்பரங்குன்றம்
திருமணக்கோலம்.....
காட்சி தந்து ஆட்சி
செய்யும் அழகா வருக....!
தணிகை மலையில்
வள்ளியை மணந்து
வேலும் மயிலும் துணையென்று
அருளிய....
சுந்தரவேலா வருக......!
வருக.....!
முருகா....வருக.....!
முருகா.....வருக.....!
கந்தா.....வருக......!
வருக.... வருக....!
கருணை கடலே
வருக..... வருக.....!
(சீர்காழியைச் சேர்ந்த சிவ.ஆ.மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}