- சிவ.ஆ. மலர்விழி ராஜா
குன்றுகள் தோறும் குமரனின் வாசம்.....
குழந்தை வேலனே
குமரா வருக......
கார்த்திகை வாசா
கஜமுகன் நேசா.......
கார்த்திகேயனே
கந்தா வருக..... வருக....!
செந்தூரில் அருளிடும்
செந்தில் நாதா......
செந்தமிழ் குமரா
முருகா வருக....!
ஈசனின் மகனே
ஈஸ்வரி மைந்தா....
திருவடி பணிந்தோம்
திருமுருகா வருக......!
கார்த்திகை பெண்களின் கரங்களில் தவழும்....
கருணை கடலே வருக....வருக.....!
பழநி கிரியின்
மேல்தனில் நின்று......
பக்தருக்கருளும்
பாலனே வருக......!
சுவாமி மலையில்
குருவாய் வந்து....
மந்திரம் அருளிய
சுவாமியே வருக.....!
பழமுதிர் சோலையில்
நாவல் பழம் தந்து
அவ்வையின் அன்பில்
கனிந்த வேலா..... வருக.....!
திருப்பரங்குன்றம்
திருமணக்கோலம்.....
காட்சி தந்து ஆட்சி
செய்யும் அழகா வருக....!
தணிகை மலையில்
வள்ளியை மணந்து
வேலும் மயிலும் துணையென்று
அருளிய....
சுந்தரவேலா வருக......!
வருக.....!
முருகா....வருக.....!
முருகா.....வருக.....!
கந்தா.....வருக......!
வருக.... வருக....!
கருணை கடலே
வருக..... வருக.....!
(சீர்காழியைச் சேர்ந்த சிவ.ஆ.மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}