குன்றெல்லாம் குமரன்!

Jan 29, 2026,04:52 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


குன்றுகள் தோறும் குமரனின் வாசம்.....


குழந்தை வேலனே 

குமரா வருக......


கார்த்திகை வாசா

கஜமுகன் நேசா.......




கார்த்திகேயனே

கந்தா வருக..... வருக....!


செந்தூரில் அருளிடும்

செந்தில் நாதா......


செந்தமிழ் குமரா

முருகா வருக....!


ஈசனின் மகனே 

ஈஸ்வரி மைந்தா....


திருவடி பணிந்தோம்

திருமுருகா வருக......!


கார்த்திகை பெண்களின் கரங்களில் தவழும்....


கருணை கடலே   வருக....வருக.....!


பழநி கிரியின்

மேல்தனில் நின்று......


பக்தருக்கருளும்

பாலனே வருக......!


சுவாமி மலையில் 

குருவாய் வந்து....


மந்திரம் அருளிய

சுவாமியே வருக.....!


பழமுதிர் சோலையில்

நாவல் பழம் தந்து


அவ்வையின் அன்பில் 

கனிந்த வேலா..... வருக.....!


திருப்பரங்குன்றம் 

திருமணக்கோலம்.....


காட்சி தந்து ஆட்சி 

செய்யும் அழகா வருக....!


தணிகை மலையில்

வள்ளியை மணந்து


வேலும் மயிலும்  துணையென்று

அருளிய....


சுந்தரவேலா வருக......!

வருக.....!


முருகா....வருக.....!

முருகா.....வருக.....!


கந்தா.....வருக......!

வருக.... வருக....!


கருணை கடலே 

வருக..... வருக.....!


(சீர்காழியைச் சேர்ந்த சிவ.ஆ.மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்