குவைத் சிட்டி: குவைத் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி பெறும் 20வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து நாட்டின் நைட் விருது போல, இந்தியாவின் பாரதரத்னா விருது போல குவைத் நாட்டின் உயரிய விருதுதான் The Order Of Mubarak Al Kabeer விருது. அந்த விருதுதான் தற்போது பிரதமர் மோடிக்குத் தரப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தலைவர்கள், அரச குடும்பத்தினர் போன்றோருக்கு மட்டுமே இந்த விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்படும். இதற்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து அரசர் சார்லஸ் போன்றோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

குவைத் நாட்டின் பாயன் அரண்மனையில் நடந்த விழாவின்போது பிரதமர் மோடிக்கு விருது அளிக்கப்பட்டது. குவைத் நாட்டின் அமீர் ஷேக் மேஷல் அல் அகமது அல் ஜாபர் அலி சபா விருதினை வழங்கிக் கெளரவித்தார். 2 நாள் பயணமாக குவைத் வந்துள்ளார் பிரதமர் மோடி. கடந்த 43 ஆண்டுகளில் குவைத்தில் சுற்றுப்பயணம் செய்யும் முதல் இந்தியப் பிரதமர் மோடிதான்.
முன்னதாக ஷேக் சசாத் அல் அப்துல்லா உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தியர்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது அவருக்கு உற்சாகமான வரவேற்பைக் கொடுத்தனர் இந்தியர்கள். நேற்று ஸ்பிக் பணியாளர்கள் முகாமுக்கும் சென்று இந்தியத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு
இதில் தான் திமுக-அதிமுக இடையே போட்டி...சீமான் சொன்ன புதிய தகவல்
திமுக.,வுக்கு பாஜக., வைக்கும் "செக்"...நயினார் எழுதிய கடிதத்திற்கு பின்னால் இவ்வளவு அரசியலா?
தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சாத்தனூர் அணை.. லீவு கிடைச்சா இங்க போக மறக்காதீங்க.. சூப்பர் பிக்னிக் ஸ்பாட்!
திருப்பதி லட்டு பிரசாதம்...2025 ம் ஆண்டில் விற்பனையில் புதிய சாதனை
துணிச்சல்
வெள்ளனையே எந்திருச்சு.. வாசக் கூட்டி சாணி தெளிச்சு.. மாமன் மகளே!
வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு
{{comments.comment}}