குவைத் சிட்டி: குவைத் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி பெறும் 20வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து நாட்டின் நைட் விருது போல, இந்தியாவின் பாரதரத்னா விருது போல குவைத் நாட்டின் உயரிய விருதுதான் The Order Of Mubarak Al Kabeer விருது. அந்த விருதுதான் தற்போது பிரதமர் மோடிக்குத் தரப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தலைவர்கள், அரச குடும்பத்தினர் போன்றோருக்கு மட்டுமே இந்த விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்படும். இதற்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து அரசர் சார்லஸ் போன்றோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

குவைத் நாட்டின் பாயன் அரண்மனையில் நடந்த விழாவின்போது பிரதமர் மோடிக்கு விருது அளிக்கப்பட்டது. குவைத் நாட்டின் அமீர் ஷேக் மேஷல் அல் அகமது அல் ஜாபர் அலி சபா விருதினை வழங்கிக் கெளரவித்தார். 2 நாள் பயணமாக குவைத் வந்துள்ளார் பிரதமர் மோடி. கடந்த 43 ஆண்டுகளில் குவைத்தில் சுற்றுப்பயணம் செய்யும் முதல் இந்தியப் பிரதமர் மோடிதான்.
முன்னதாக ஷேக் சசாத் அல் அப்துல்லா உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தியர்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது அவருக்கு உற்சாகமான வரவேற்பைக் கொடுத்தனர் இந்தியர்கள். நேற்று ஸ்பிக் பணியாளர்கள் முகாமுக்கும் சென்று இந்தியத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}