புதுக்கோட்டை மீனவர்கள்.. 4 பேரை கைது செய்து.. இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டகாசம்

Sep 05, 2024,11:00 AM IST

புதுக்கோட்டை: நெடுந்தீவு பகுதியில் விசைப்படகுடன் அதிலிருந்த  நான்கு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


தமிழக மீனவர்கள் ஏராளமானோர் இன்று அதிகாலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு பகுதியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும் மற்றும் அதிலிருந்த நான்கு மீனவர்களையும் கைது செய்தனர்.




இதனைத் தொடர்ந்து  மீனவர்கள் நான்கு பேரையும் இலங்கை காங்கேசன்  துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர்கள் கைது, அவர்கள் மீது தாக்குதல், விசைப்படகுகள் படகுகள் பறிமுதல், மீனவர்களுக்கு அபராதம், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்வையாகவே இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.


இதற்கிடையே தமிழக மீனவர்கள் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் பார்க் நீர்நிலைப் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இலங்கை கடற்பறையினரின் நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்