புதுக்கோட்டை மீனவர்கள்.. 4 பேரை கைது செய்து.. இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டகாசம்

Sep 05, 2024,11:00 AM IST

புதுக்கோட்டை: நெடுந்தீவு பகுதியில் விசைப்படகுடன் அதிலிருந்த  நான்கு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


தமிழக மீனவர்கள் ஏராளமானோர் இன்று அதிகாலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு பகுதியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும் மற்றும் அதிலிருந்த நான்கு மீனவர்களையும் கைது செய்தனர்.




இதனைத் தொடர்ந்து  மீனவர்கள் நான்கு பேரையும் இலங்கை காங்கேசன்  துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர்கள் கைது, அவர்கள் மீது தாக்குதல், விசைப்படகுகள் படகுகள் பறிமுதல், மீனவர்களுக்கு அபராதம், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்வையாகவே இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.


இதற்கிடையே தமிழக மீனவர்கள் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் பார்க் நீர்நிலைப் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இலங்கை கடற்பறையினரின் நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?

news

தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி

news

தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

news

தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

news

பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி

news

பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!

news

தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

news

இயற்பியலும் இயக்கமும்.. எல்லாமே அதை மையமாக வைத்துதான் நடக்குது!

news

சர்வதேச அளவில்.. பெண்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான மனித உரிமை மீறல் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்