புதுக்கோட்டை மீனவர்கள்.. 4 பேரை கைது செய்து.. இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டகாசம்

Sep 05, 2024,11:00 AM IST

புதுக்கோட்டை: நெடுந்தீவு பகுதியில் விசைப்படகுடன் அதிலிருந்த  நான்கு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


தமிழக மீனவர்கள் ஏராளமானோர் இன்று அதிகாலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு பகுதியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும் மற்றும் அதிலிருந்த நான்கு மீனவர்களையும் கைது செய்தனர்.




இதனைத் தொடர்ந்து  மீனவர்கள் நான்கு பேரையும் இலங்கை காங்கேசன்  துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர்கள் கைது, அவர்கள் மீது தாக்குதல், விசைப்படகுகள் படகுகள் பறிமுதல், மீனவர்களுக்கு அபராதம், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்வையாகவே இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.


இதற்கிடையே தமிழக மீனவர்கள் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் பார்க் நீர்நிலைப் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இலங்கை கடற்பறையினரின் நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?

news

Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?

news

2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!

news

தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்

news

இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

news

புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

news

டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்

news

The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு

news

ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்