மலராய் மலரும் பொன்னாலயம் .. புயல் வந்த போதும்.. மனமே அசையா ஆலயம்!

Mar 08, 2026,06:59 PM IST
- தா. சிலம்பரசி

மலராய் மலரும் பொன்னாலயம்
புயல் வந்த போதும்
மனமே அசையா  ஆலயம்..

பெண்  
பிறவி ஒளியின் முதல் தீபம்
புன்னகையில் பொங்கும் ஆயிரம் வீரம்...
கருவறை முதல் உலகம் வரை
கனவுகளின் பாதை அவள் தோளில் 
 ‘அன்பு’நிறை என்றாலே
ஆரத்தழுவுதலே அவள் 
நொறுங்காத நெஞ்சம்
நெகிழும் கரங்கள்



நெடுந்தூரம் நடக்கும் நம்பிக்கைக் கனங்கள்
விழுந்தாலும் எழுப்பும் ஒளி அவள்...
விழிகளிலே வெற்றி எழுதும் வாள் அவள்
அவள் சிரிப்பு ஒரு சக்தி
அவள் மௌனம் ஒரு புத்தி
அவள் பொறுமை ஒரு பூமி
அவள் போராட்டம் ஒரு புராணம்

இன்றைய தினம் 
அவளை மட்டும் கொண்டாடவில்லை…
அவளின் பயணத்தையும் பலத்தையும்
அவள் உருவாக்கும் எதிர்காலத்தையும்
வணங்குகிறோம்...!

(தா சிலம்பரசி, வேலூர் மாவட்டம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்