சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மொழி மாற்றம் சரியாக நடக்காமல் போனதால் எல்ஐசியின் இணையதளத்தின் முகப்பு இந்தியில் இருந்ததாகவும் தற்போது அது சரியாகி விட்டதாகவும் எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளம் திடீரென முழுமையாக இந்திக்கு மாறிக் காணப்பட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக தென்னிந்தியாவில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டிலிருந்து முதல் குரல் ஒலித்தது. முதல் எதிர்ப்பை மதுரை எம்.பி. சு வெங்கடேசன் பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் என பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.+
இது மொழி கலாச்சார திணிப்பு, மொழி சர்வாதிகாரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியிருந்தார். இந்த நிலையில் இந்த குழப்பத்திற்கு தற்போது எல்ஐசி நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எங்களது கார்ப்பரேட் இணையதளத்தில் http://licindia.in தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மொழி மாற்றம் சரியாக நடைபெறவில்லை. இந்த சிக்கல் தற்போது சரி செய்யப்பட்டு தற்போது இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ளது. அசவுகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
OVERCOMING STRUGGLES.. சவால்களை நொறுக்கி.. சாதனைகளைப் படைப்போம்!
வேலூர் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்
விஜய் பிரசாரம்... ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை
தங்கம் விலை இன்றும் உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை உயர்வு!
மார்கழி 02ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 02 வரிகள்
Healthy Cooking: சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி?
சிந்தனைத்துளிகள்.. ரகசியமான வாழ்கைப் பாதையில் மாற்றம் ஒன்றே மாறாதது!
ஆணுக்கு சமமாய் நானும் தான்!
The Power of Hope... நம்பிக்கையின் சக்தி.. பலம் தரும்.. சவால்களைச் சந்திக்க தைரியம் தரும்!
{{comments.comment}}