சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மொழி மாற்றம் சரியாக நடக்காமல் போனதால் எல்ஐசியின் இணையதளத்தின் முகப்பு இந்தியில் இருந்ததாகவும் தற்போது அது சரியாகி விட்டதாகவும் எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளம் திடீரென முழுமையாக இந்திக்கு மாறிக் காணப்பட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக தென்னிந்தியாவில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டிலிருந்து முதல் குரல் ஒலித்தது. முதல் எதிர்ப்பை மதுரை எம்.பி. சு வெங்கடேசன் பதிவு செய்தார்.
அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் என பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.+
இது மொழி கலாச்சார திணிப்பு, மொழி சர்வாதிகாரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியிருந்தார். இந்த நிலையில் இந்த குழப்பத்திற்கு தற்போது எல்ஐசி நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எங்களது கார்ப்பரேட் இணையதளத்தில் http://licindia.in தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மொழி மாற்றம் சரியாக நடைபெறவில்லை. இந்த சிக்கல் தற்போது சரி செய்யப்பட்டு தற்போது இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ளது. அசவுகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}