சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மொழி மாற்றம் சரியாக நடக்காமல் போனதால் எல்ஐசியின் இணையதளத்தின் முகப்பு இந்தியில் இருந்ததாகவும் தற்போது அது சரியாகி விட்டதாகவும் எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளம் திடீரென முழுமையாக இந்திக்கு மாறிக் காணப்பட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக தென்னிந்தியாவில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டிலிருந்து முதல் குரல் ஒலித்தது. முதல் எதிர்ப்பை மதுரை எம்.பி. சு வெங்கடேசன் பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் என பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.+
இது மொழி கலாச்சார திணிப்பு, மொழி சர்வாதிகாரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியிருந்தார். இந்த நிலையில் இந்த குழப்பத்திற்கு தற்போது எல்ஐசி நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எங்களது கார்ப்பரேட் இணையதளத்தில் http://licindia.in தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மொழி மாற்றம் சரியாக நடைபெறவில்லை. இந்த சிக்கல் தற்போது சரி செய்யப்பட்டு தற்போது இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ளது. அசவுகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}