சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மொழி மாற்றம் சரியாக நடக்காமல் போனதால் எல்ஐசியின் இணையதளத்தின் முகப்பு இந்தியில் இருந்ததாகவும் தற்போது அது சரியாகி விட்டதாகவும் எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளம் திடீரென முழுமையாக இந்திக்கு மாறிக் காணப்பட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக தென்னிந்தியாவில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டிலிருந்து முதல் குரல் ஒலித்தது. முதல் எதிர்ப்பை மதுரை எம்.பி. சு வெங்கடேசன் பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் என பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.+
இது மொழி கலாச்சார திணிப்பு, மொழி சர்வாதிகாரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியிருந்தார். இந்த நிலையில் இந்த குழப்பத்திற்கு தற்போது எல்ஐசி நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எங்களது கார்ப்பரேட் இணையதளத்தில் http://licindia.in தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மொழி மாற்றம் சரியாக நடைபெறவில்லை. இந்த சிக்கல் தற்போது சரி செய்யப்பட்டு தற்போது இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ளது. அசவுகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}