"டோன்ட் ஒர்ரி".. தென் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு.. லேசான மழைக்கு.. வாய்ப்பு இருக்காம்!

Jan 18, 2024,06:19 PM IST

சென்னை: தென்  மாவட்டங்களில் 3 நாட்களுக்கு (18,19 மற்றும் 20) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வடகிழக்கு பருவமழை விடைபெற்று விட்டதாக வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இயல்பை விட அளவுக்கு அதிகமாக மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும்  தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பிறகு ஜனவரி முதல் வாரம் வரை வடகிழக்கு பருவ மழை தொடரும் . பின்னர் மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வடகிழக்கு பருவ மழை முடிவுக்கு வரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 




இதனால் கடந்த சில நாட்களில் மழை குறைந்து பல்வேறு பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பகல் 10 மணி வரை கூட முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்ற வண்ணம் இருந்தனர்.


இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


ஜனவரி 18, 19, மற்றும் 20 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதே சமயம் நீலகிரி மாவட்டத்தில்  ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாம். அதேசமயம், இன்று முதல் 24 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும்.


சென்னையை பொருத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்