எதிர்காலத்தில் நடக்க போகும் சில விஷயங்களை முன்கூட்டியே அறிவுறுத்தும் சில கருவிகளாகவே பறவைகள், பூச்சிகள் நம்முடைய சாஸ்திரங்களில் கருதப்படுகிறது. அவற்றில் பல்லிகளுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. பஞ்சாங்கத்தில் பல்லிகள் கத்துவது, பல்லி விழுவது போன்றவற்றை வைத்தே பலன்கள் கணிக்கப்பட்டது. இதற்கு கெளரி சாஸ்திரம் என்றே பெயர். நவகிரகங்களில் பல்லி என்பது கேது பகவானை குறிப்பதாகும்.
காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றில் உள்ள பெருமாள் கோவில்களில் பல்லியை வழிபடுவும் பழக்கமும் மக்களிடம் உள்ளது. கோவில்களில் பூஜையின் போதும், ஜோதிடம் கணித்து சொல்லும் போதும் பல்லிகள் கத்தினால் அதை நல்ல சகுனமாகவும், கடவுள் ஆசி வழங்கி விட்டதாகவும் சொல்வார்கள்.
பல்லிகள் வீடுகளில் சாதாரணமாக திரியும் என்றாலும் அவைகள் அனைத்து நேரங்களிலும் சத்தமிடுவது கிடையாது. பல்லிகள் சத்தமிடும் நேரம், திசை ஆகியவற்றை வைத்தும் பலன்கள் சொல்லும் முறை நம்முடை சாஸ்திரத்தில் உள்ளது. பல்லி வீட்டின் எந்த திசையில் கத்தினால் என்ன பலன் என்பதை வாங்க தெரிஞ்சுக்கலாம்.

பல்லிகள் கத்தும் திசையும், பலன்களும் :
கிழக்கு - வீட்டின் கிழக்கு பகுதியில் பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் ராகு கிரகத்தின் தன்மை உள்ளதாக அர்த்தம். இத வீட்டிற்கு நல்லதல்ல. கெட்ட செய்திகள் வரக்கூடும்.
தென்கிழக்கு - தென்கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டில் ஏதாவது பிரச்சனை வரப் போகிறது என்று அர்த்தம். சில நாட்களில் வீட்டில் ஏதாவது கெட்டது நடக்க போகிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
வடக்கு - வடக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டில் சுப காரியம் நடக்க போகிறது அல்லது சுப செய்தி தேடி வரப் போகிறது என்று அர்த்தம்.
தெற்கு - திற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் பெரிய மனிதர்களின் சந்திப்புகள், உயர்வுகள் வரப் போகிறது என்று அர்த்தம்.
தென்மேற்கு - தென்மேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டிற்கு விருந்தினர்கள் வரப் போகிறார்கள் என்றும், லாபம் வரப் போகிறது என்றும் அர்த்தம்.
மேற்கு - மேற்கு திசையில் பல்லி கத்தினால் கடன், நோய்கள் வரப் போகிறது, வீட்டில் சண்டை வரப் போகிறது என்று அர்த்தம்.
வடகிழக்கு - வடகிழக்கு திசையில் அதாவது ஈசான மூலையில் பல்லி கத்தினால் பகை வரும் என்று அர்த்தம். சில சமயங்களில் இது லாபத்தையும் கொடுக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}