எதிர்காலத்தில் நடக்க போகும் சில விஷயங்களை முன்கூட்டியே அறிவுறுத்தும் சில கருவிகளாகவே பறவைகள், பூச்சிகள் நம்முடைய சாஸ்திரங்களில் கருதப்படுகிறது. அவற்றில் பல்லிகளுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. பஞ்சாங்கத்தில் பல்லிகள் கத்துவது, பல்லி விழுவது போன்றவற்றை வைத்தே பலன்கள் கணிக்கப்பட்டது. இதற்கு கெளரி சாஸ்திரம் என்றே பெயர். நவகிரகங்களில் பல்லி என்பது கேது பகவானை குறிப்பதாகும்.
காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றில் உள்ள பெருமாள் கோவில்களில் பல்லியை வழிபடுவும் பழக்கமும் மக்களிடம் உள்ளது. கோவில்களில் பூஜையின் போதும், ஜோதிடம் கணித்து சொல்லும் போதும் பல்லிகள் கத்தினால் அதை நல்ல சகுனமாகவும், கடவுள் ஆசி வழங்கி விட்டதாகவும் சொல்வார்கள்.
பல்லிகள் வீடுகளில் சாதாரணமாக திரியும் என்றாலும் அவைகள் அனைத்து நேரங்களிலும் சத்தமிடுவது கிடையாது. பல்லிகள் சத்தமிடும் நேரம், திசை ஆகியவற்றை வைத்தும் பலன்கள் சொல்லும் முறை நம்முடை சாஸ்திரத்தில் உள்ளது. பல்லி வீட்டின் எந்த திசையில் கத்தினால் என்ன பலன் என்பதை வாங்க தெரிஞ்சுக்கலாம்.

பல்லிகள் கத்தும் திசையும், பலன்களும் :
கிழக்கு - வீட்டின் கிழக்கு பகுதியில் பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் ராகு கிரகத்தின் தன்மை உள்ளதாக அர்த்தம். இத வீட்டிற்கு நல்லதல்ல. கெட்ட செய்திகள் வரக்கூடும்.
தென்கிழக்கு - தென்கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டில் ஏதாவது பிரச்சனை வரப் போகிறது என்று அர்த்தம். சில நாட்களில் வீட்டில் ஏதாவது கெட்டது நடக்க போகிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
வடக்கு - வடக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டில் சுப காரியம் நடக்க போகிறது அல்லது சுப செய்தி தேடி வரப் போகிறது என்று அர்த்தம்.
தெற்கு - திற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் பெரிய மனிதர்களின் சந்திப்புகள், உயர்வுகள் வரப் போகிறது என்று அர்த்தம்.
தென்மேற்கு - தென்மேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டிற்கு விருந்தினர்கள் வரப் போகிறார்கள் என்றும், லாபம் வரப் போகிறது என்றும் அர்த்தம்.
மேற்கு - மேற்கு திசையில் பல்லி கத்தினால் கடன், நோய்கள் வரப் போகிறது, வீட்டில் சண்டை வரப் போகிறது என்று அர்த்தம்.
வடகிழக்கு - வடகிழக்கு திசையில் அதாவது ஈசான மூலையில் பல்லி கத்தினால் பகை வரும் என்று அர்த்தம். சில சமயங்களில் இது லாபத்தையும் கொடுக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}