லோக்சபா தேர்தல் 2024 : வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்

Mar 30, 2024,10:07 AM IST
சென்னை : லோக்சபா தேர்தலின் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு இன்று (மார்ச் 30) கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் இன்று யாரெல்லாம் வேட்புமனுக்களை வாபஸ் பெற போகிறார்கள் என்பதை அனைத்து கட்சிகளும் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருக்கின்றன.

2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக மார்ச் 20ம் தேதி தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. 

முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 21 ம் தேதி துவங்கி நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 28ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 1403 வேட்பாளர்கள், 1749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக கரூரில் 73, வட சென்னையில் 67, தென் சென்னையில் 64 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 



இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இவற்றில் 1085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 664 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு மார்ச் 30ம் தேதியான கடைசி நாளாகும். இதனால் எந்தெந்த தொகுதியில் யார் யாரெல்லாம் வேட்புமனுக்களை வாபஸ் பெற போகிறார்கள் என்பதை அனைத்து கட்சிகளும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைகிறது. இதனால் மாலை 5 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிடும். ஏற்கனவே சில வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களுக்கும் தேர்தல் சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும். அதற்கு பிறகு வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்