லோக்சபா தேர்தல் 2024 : வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்

Mar 30, 2024,10:07 AM IST
சென்னை : லோக்சபா தேர்தலின் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு இன்று (மார்ச் 30) கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் இன்று யாரெல்லாம் வேட்புமனுக்களை வாபஸ் பெற போகிறார்கள் என்பதை அனைத்து கட்சிகளும் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருக்கின்றன.

2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக மார்ச் 20ம் தேதி தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. 

முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 21 ம் தேதி துவங்கி நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 28ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 1403 வேட்பாளர்கள், 1749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக கரூரில் 73, வட சென்னையில் 67, தென் சென்னையில் 64 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 



இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இவற்றில் 1085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 664 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு மார்ச் 30ம் தேதியான கடைசி நாளாகும். இதனால் எந்தெந்த தொகுதியில் யார் யாரெல்லாம் வேட்புமனுக்களை வாபஸ் பெற போகிறார்கள் என்பதை அனைத்து கட்சிகளும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைகிறது. இதனால் மாலை 5 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிடும். ஏற்கனவே சில வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களுக்கும் தேர்தல் சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும். அதற்கு பிறகு வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்