லோக்சபா தேர்தல் 2024 : வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்

Mar 30, 2024,10:07 AM IST
சென்னை : லோக்சபா தேர்தலின் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு இன்று (மார்ச் 30) கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் இன்று யாரெல்லாம் வேட்புமனுக்களை வாபஸ் பெற போகிறார்கள் என்பதை அனைத்து கட்சிகளும் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருக்கின்றன.

2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக மார்ச் 20ம் தேதி தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. 

முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 21 ம் தேதி துவங்கி நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 28ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 1403 வேட்பாளர்கள், 1749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக கரூரில் 73, வட சென்னையில் 67, தென் சென்னையில் 64 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 



இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இவற்றில் 1085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 664 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு மார்ச் 30ம் தேதியான கடைசி நாளாகும். இதனால் எந்தெந்த தொகுதியில் யார் யாரெல்லாம் வேட்புமனுக்களை வாபஸ் பெற போகிறார்கள் என்பதை அனைத்து கட்சிகளும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைகிறது. இதனால் மாலை 5 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிடும். ஏற்கனவே சில வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களுக்கும் தேர்தல் சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும். அதற்கு பிறகு வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்