சென்னை: 2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜனவரி 8ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடாளுமன்ற லோக்சபாவுக்குத் தேர்தல் நடத்தப்படும். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தலாகும். 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் எந்த தேதியில் நடக்கும் என தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் ஜனவரி 8ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் பங்குபெறுவார்கள். தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
கட்சிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களை அறிவதற்காகவும், தேர்தல் தேதியை முடிவு செய்வது தொடர்பான கருத்துகளுக்காகவும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}