புயல் வேகத்தில் தொகுதிப் பங்கீடு.. டெல்லியில் "ஸ்வீட் ஷாக்".. 3 காங்கிரஸுக்கு, 4 ஆம் ஆத்மிக்கு!

Feb 22, 2024,07:25 PM IST

டெல்லி: டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றைக் கூட தர முடியாது என்று அடம் பிடித்து வந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது காங்கிரஸுக்கு 3 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது  பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி பல படி இறங்கி வந்திருப்பதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமாக சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் முடிவை பலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.




சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்த கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியை தேர்தல் அதிகாரி ரூபத்தில் பறித்து விட்டாலும் கூட, சுப்ரீம் கோர்ட் தலையிட்டு ஆம் ஆத்மியை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்தியா கூட்டணிக்கு வடக்கில் கிடைத்த முதல் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில்தான் தற்போது டெல்லி தொகுதிப் பங்கீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் மொத்தம் 7 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் இங்கு பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டன. இதில் பாஜக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் 7 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவின.


இதில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் 2ம் இடத்தைப் பிடித்தது. 2 தொகுதிகளில் ஆம் ஆத்மி 2வது இடத்தைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 22.5 சதவீத வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு 18.1 சதவீத வாக்குகளும் கிடைத்தன. பாஜகவுக்கு 57 சதவீத வாக்குகள் கிடைத்தன.


வருகிற லோக்சபா தேர்தலில் தாங்கள் 7 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக முதலில் ஆம் ஆத்மி கூறி வந்தது. பின்னர் இந்தியா கூட்டணியில் இணைந்த பிறகு ஒரு தொகுதியை மட்டும் காங்கிரஸுக்கு விட்டுத் தருவோம் என்று கூறியது. இந்த நிலையில்தான் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது மேலும் சில படிகள் இறங்கி 3 தொகுதிகளை அது ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


4 தொகுதிகளில் ஆம் ஆத்மியும், 3 தொகுதிகளில் காங்கிரஸும் போட்டியிடுவது என்று டீல் ஏற்பட்டுள்ளதாம்.  இதுதவிர சண்டிகர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தெரிகிறது. அந்தத் தொகுதியில் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிக்குமாம். இதுதொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. சிக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட  உ.பி. தொகுதிப் பங்கீடும், டெல்லி ஒப்பந்தமும் டக்கென முடிந்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  இதேபோல பஞ்சாபிலும் விரைவில் சுமூகமாக உடன்பாடு எட்டப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்