டெல்லி: டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றைக் கூட தர முடியாது என்று அடம் பிடித்து வந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது காங்கிரஸுக்கு 3 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி பல படி இறங்கி வந்திருப்பதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமாக சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் முடிவை பலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்த கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியை தேர்தல் அதிகாரி ரூபத்தில் பறித்து விட்டாலும் கூட, சுப்ரீம் கோர்ட் தலையிட்டு ஆம் ஆத்மியை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்தியா கூட்டணிக்கு வடக்கில் கிடைத்த முதல் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் தற்போது டெல்லி தொகுதிப் பங்கீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் மொத்தம் 7 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் இங்கு பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டன. இதில் பாஜக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் 7 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவின.
இதில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் 2ம் இடத்தைப் பிடித்தது. 2 தொகுதிகளில் ஆம் ஆத்மி 2வது இடத்தைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 22.5 சதவீத வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு 18.1 சதவீத வாக்குகளும் கிடைத்தன. பாஜகவுக்கு 57 சதவீத வாக்குகள் கிடைத்தன.
வருகிற லோக்சபா தேர்தலில் தாங்கள் 7 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக முதலில் ஆம் ஆத்மி கூறி வந்தது. பின்னர் இந்தியா கூட்டணியில் இணைந்த பிறகு ஒரு தொகுதியை மட்டும் காங்கிரஸுக்கு விட்டுத் தருவோம் என்று கூறியது. இந்த நிலையில்தான் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது மேலும் சில படிகள் இறங்கி 3 தொகுதிகளை அது ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
4 தொகுதிகளில் ஆம் ஆத்மியும், 3 தொகுதிகளில் காங்கிரஸும் போட்டியிடுவது என்று டீல் ஏற்பட்டுள்ளதாம். இதுதவிர சண்டிகர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தெரிகிறது. அந்தத் தொகுதியில் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிக்குமாம். இதுதொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. சிக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட உ.பி. தொகுதிப் பங்கீடும், டெல்லி ஒப்பந்தமும் டக்கென முடிந்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல பஞ்சாபிலும் விரைவில் சுமூகமாக உடன்பாடு எட்டப்படும் என்று தெரிகிறது.
கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!
காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!
தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!
தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்த வேண்டும்: சீமான்!
ஆன்மீகக் குருக்களில் சிறந்தவர்.. அன்பையும் கருணையையும் போதித்த சிந்தனை.. சாய்பாபா!
பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் அதிரடி முடக்கம்.. மத்திய அரசு நடவடிக்கை..!
ஏறிய வேகத்தில் குறைந்து வரும் தங்கம் விலை... நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு!
கொல்வோம்னு மிரட்டுகிறார்கள்.. டெல்லி காவல் நிலையத்தில்.. கௌதம் கம்பீர் புகார்!
{{comments.comment}}