சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனப்படும் அமமுக முடிவு செய்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளன. 21 தொகுதிகளைக் கேட்டு பாஜகவை அதிர வைத்துள்ளது அமமுக.
இத்தனை தொகுதிகளையும் பாஜக தருமா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இதில் பாதியாவது கிடைக்கும் என்று அமமுக நம்புகிறது.
அமமுக படு லாவகமாக தனது தொகுதிகளை திட்டமிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய தொகுதிகளாக தேர்வு செய்து பாஜகவை அதிர வைத்துள்ளது. அமமுக கேட்டுள்ள 21 தொகுதிகளில், 3 தனித் தொகுதிகளும் அடக்கம். அதில் ஒன்று தென்காசி. இந்தத் தொகுதியை புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் கேட்டு வருகிறார். அதை யாருக்கு பாஜக கொடுக்கும் என்று தெரியவில்லை.
அதிகபட்சமாக தென் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளைக் கேட்டுள்ளது அமமுக. அதேபோல மத்திய தமிழ்நாட்டில் 5 தொகுதிகளையும் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 தொகுதிகளையும் கேட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களில் 2 தொகுதிகளை மட்டுமே அது கோரியுள்ளது.

தமிழ்நாட்டில் தெளிவாக உள்ள ஒரே கூட்டணியாக திமுக விளங்குகிறது. அங்கு ஏற்கனவே உள்ள கட்சிகள்தான் இந்த தேர்தலையும் சந்திக்கப் போகின்றன. கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளிலேயே இந்த முறையும் அனேகமாக போட்டியிட வாய்ப்புள்ளது. சில தொகுதிகளில் மாற்றம் இருக்கலாம். மற்றபடி பெரிதாக எந்தப் பிரச்சினையும் இந்த முறை ஏற்பட வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். அதிகபட்சம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணையலாம் என்று தெரிகிறது.
வேறு பெரிய கட்சிகள் எதுவும் வர வாய்ப்பில்லை. காரணம், அவர்களுக்கேற்ற தொகுதிகளைத் தர கூட்டணியில் இடமில்லை. மறுபக்கம் அதிமுக கூட்டணியில் யார் இருக்கப் போகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை. கடைசி நிமிடத்தில் கூட மாற்றம் வரும் என்று ஜெயக்குமார் சொல்லிக் கொண்டிருக்கிறார். அது என்ன மாற்றம் என்று தெரியவில்லை.
பாஜக கூட்டணியில் யார் யார்?
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, அமமுக, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை இடம் பெறும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இதில் அமமுக மற்றும் ஓபிஎஸ்ஸிடமிருந்து போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விருப்பப் பட்டியலை பாஜக மேலிடம் கேட்டுள்ளதாம். இதில் அமமுக தனது விருப்பப் பட்டியலை அனுப்பி வைத்து விட்டதாம்.
தங்களுக்கு 21 தொகுதிகள் தேவை என்று கூறி பாஜகவை அதிர வைத்துள்ளதாம் அமமுக. இதில் எத்தனை தொகுதிகளை பாஜக தரும் என்று தெரியவில்லை. ஆனால் குறைந்தது 12 சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அமமுக உள்ளது. 15 சீட் வரை அழுத்திக் கேட்டுப் பெறவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
பிப்ரவரி 11ம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா சென்னை வருகிறார். அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. குக்கர் சின்னத்தில் போட்டியிட டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளார். அதில் போட்டியிட்டு கணிசமான வெற்றியைப் பெற்றால், அடுத்து அதிமுகவை உடைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அமமுக கோரியுள்ள தொகுதிகள் என்று கூறப்படுபவை:
வட தமிழ்நாடு
அரக்கோணம்
ஆரணி
வட சென்னை
தென்சென்னை
திருவண்ணாமலை
தென் தமிழ்நாடு
தென்காசி (தனி)
மதுரை
ராமநாதபுரம்
தூத்துக்குடி
திண்டுக்கல்
விருதுநகர்
திருநெல்வேலி
தேனி
சிவகங்கை
மத்திய தமிழ்நாடு (காவிரி டெல்டா)
நாகப்பட்டனம் (தனி)
சிதம்பரம் (தனி)
திருச்சிராப்பள்ளி
தஞ்சாவூர்
மயிலாடுதுறை
மேற்கு தமிழ்நாடு
பொள்ளாச்சி
திருப்பூர்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}