பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவையில் ரோடுஷோ.. குவியும் பாஜக தொண்டர்கள்!

Mar 18, 2024,10:08 AM IST

கோவை: பிரதமர் மோடி கோவையில் இன்று நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். நாளை சேலத்தில் நடைபெறும் பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார்.


தமிழ்நாட்டில் லேக்சபா தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும்  என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் அறிவித்துள்ளார். 


இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. பாஜக சார்பில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். அங்கு வாகனப் பேரணியில் பங்கேற்கவுள்ளார்.  இதற்காக ஆள் திரட்டும்  பணியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. 




கர்நாடக மாநிலத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகே வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக  5:45 மணிக்கு வாகன பேரணி தொடங்குகிறது. பூ மார்க்கெட், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி,  ஆர் எஸ் புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் பிரதமரின் ரோடு ஷோ நிறைவடைகிறது. 


வாகன பேரணி சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து  கோவையில் உள்ள விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார் பிரதமர். 


பிரதமரின் வருகை காரணமாக கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பாதுகாப்பு படை, தேசிய பாதுகாப்பு படை,  மத்திய உளவு பிரிவு மற்றும் தமிழக காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சுமார் 4,000 மேற்பட்டோர் பாதுகாப்பு  பணியில் பணியாற்ற உள்ளனர். 


இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் கூறுகையில், பிரதமர் வருகையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான  நிலையம் தொடங்கி ஆர் எஸ் புரம் அஞ்சல் நிலையம் வரையிலான பகுதிகளில் நான்காயிரத்துக்கு மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.


நாளை சேலத்தில் கூட்டம்


நாளை சேலம் வரும் பிரதமர் ஜெகன் நாயக்கன்பட்டியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார். இதனையொட்டி சேலத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 


பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக கமலாபுரம் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார் பிரதமர் மோடி.

சமீபத்திய செய்திகள்

news

எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!

news

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்...3 நாட்கள் மட்டுமே அவகாசம்

news

ஐபிஎல் 2026 : சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

news

Monday Motivation Short Story: பரிதவிப்பு!

news

மீரா... டைரியை முழுசா படிச்சியா?.. (நீ மழை - 8)

news

Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!

news

DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு

news

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி

news

C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!

அதிகம் பார்க்கும் செய்திகள்