- எம்.கே. திருப்பதி
காதல்
காட்சி கவர்ச்சியின்
நேர்ச்சிப் பூக்கள்
ஆயிரம் உணர்வுகளின்
அற்புதத் தூண்டல்கள்
வளர்சிதை மாற்றம் போல்
மனநிலைகளின்
மாய மாற்றங்கள்

காதல் ஹார்மோன்கள்
ஹார்மோனியம் வாசிக்கும்
மன்மதன் அன்புகள்
என்புகள் துளைக்கும்
நெஞ்சு குழிக்குள்
பட்டாம்பூச்சிக் கூட்டங்கள்
படபடத்துத் திரியும்
வானம் வசப்படும்
வாழ்க்கை நிலைப்படும்
காணும் யாவும்
கவிதையின் ஊற்றுகள்....
காதல் பசுக்கள்
வீரத்திமில் விடைகளை
மோழையாக்கும்
கோழை விழுங்கும்
கோழையை
கோபம் கொள்ள வைக்கும்
கிளியோபாட்ரா போன்ற
கிளிகளுக்கு
காதல் ஆயுதமானது
அம்பிகாபதி அமராவதி
இவர்கள் காதல்
இன்றளவும் பேசப்படும்
காவிய காகிதமானது
காதல்
சமத்துவ எழுச்சி
சமூக கவர்ச்சி
சாதிமதம் பார்க்காத
சகத்தின் உயற்சி...
பெண்ணை கண்டோம்
கவலை மறந்தோம்
பெண்ணை கண்டோம்
கவிதை வரைந்தோம் '
என்கிறார்
காவியக் கவிஞர்வாலி!
நோதலில் கூட
காதலும் உண்டு
மோதலில் கூட காதல்
முளைப்பதும் உண்டு!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
Paavalar Maayon Mangai Poem: வழிகிறதே வழிகிறதே!
மலாய் மட்டன் கோஃப்தா.. செம டேஸ்ட்டி.. சாப்பிட்டா சூப்பர் திருப்தி!
மே 18.. மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் பயங்கரம்!
The Terrace That Stored Our Summers.. வெயில் மட்டுமல்ல.. நினைவுகளும்!
Rajninkanth Clarification: விஜய் மீது எனக்குப் பொறாமை இல்லை.. நான் தரங்கெட்டவன் இல்லை.. ரஜினிகாந்த்
இந்தியா திரும்பி வரும் சோழர் காலத்து செப்பேடுகள்.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு.. முதல்வர் வசம் இந்தத் துறைகள்.. மற்றவர்களுக்கு என்ன துறை?
செய்தியாளர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் தயங்குவது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை .. நடிகர் ரவிமோகன் அறிவிப்பு
{{comments.comment}}