தாமரைக் கண்கள்.. உணர்வுகளின் ஊர்வலம்.. கனவுகளில் காதல்!

Aug 30, 2023,12:27 PM IST
- தேவி

"என்னருகில் நீ இருக்கும் நொடியில்
தன்னிலை மறந்து வானில் பறக்கும் இறகு போல் சிலிர்க்கின்றேன்
என் எண்ணங்கள் உன் வார்த்தையாக வரும் போதும்
உன் மௌனங்களை உணர்ந்து 
எனது பாஷைகளும் ஊமை ஆகிறது"

காதல் தரும் உணர்வுகள் எப்போதுமே ஸ்பெஷல்தானே...!



காதலை ஒவ்வொருவரும் உணர  தான் செய்கிறார்கள். மனிதனுடைய செயல்கள், எண்ணங்கள் ,வாழ்விடம் வெவ்வேறாக இருப்பினும் அனைவருடைய காதல் உணர்வுகளும் பொதுவான ஒன்றாக தான் உள்ளது .அதை வெளிப்படுத்தும் விதம் வேறுபடுமேயன்றி அதன் அடி நாதம்.. இயல்பு மாறாது.  ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தன்னுடையவள், தன்னுடையவன் என்ற உணர்வு ஏற்படுத்துவதும் காதலே. இதில் காதலின் நிலைப்பாடு என்பது அவரவர் வயதிற்கு ஏற்றார் போல் மாறுபடத்தான் செய்கிறது. 

கல்லூரி பருவத்தில் காதலிப்பவர்கள் தங்களுடைய மனதின் கலர் கலரான கனவுகளில் திளைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். தூரத்தில் இருக்கும் பார்வையின் தேடல்களை அழகாக வெளிப்படுத்துவார்கள். தன்னவளின் கூந்தல் பூவை மயில் இறகுகளைப் போன்று மறைத்து வைப்பதும், தன்னுடையவளின் பார்வையை பார்த்து நாணம் அடைவதும் என்று இளமை பருவத்தில் ஏற்படும் காதல் உணர்வுகளை மனக்கனவில் பெருக்கிக் கொண்டு தங்களுக்குள் ஒரு அழகான காதல் பூவை வளர்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். 

இளம் வயதினரின் காதல் இப்படியென்றால்.. திருமணமானவர்களின் காதல், விசித்திரமானது, அதுவரை தனக்காக வாழ்ந்த வாழ்க்கையை தன்னுடைய புதிய பந்ததிற்காக வாழ ஆரம்பிக்கிறார்கள். தனிமையில் அவனுடன் பேசிய வார்த்தைகளை நினைத்து இதழ்களில் நாணத்தைப் பூசிக்கொண்டு, அவனுடைய வருகையை எதிர்நோக்கி கொண்டு, அவனுடைய வருகையை அறிந்து "பனியில் வாடும் தாமரை மலர்கள் சூரியனைக் கண்டதும் உயிர்தெழுவதை போல் தோன்றும் உணர்வை கண்ணில் உறைய வைப்பாள் ". அவனும் வசந்த காற்று தன்னை நோக்கி வருவதைக் கண்டு பூங்காற்றுக்கு ஏங்கும் மொட்டுக்கள் எப்படி, காற்று பட்டதும், பட்டென மலர்கிறதோ அந்த உணர்வை உணர்ந்து தன்னவளின் தாமரை கண்களை காண துடிக்கின்றான்.



வயது முதிர்ந்த பிறகு வரும் காதல் என்பது அதிலும் மென்மையானதாகவும், வெட்டிவேர் போன்று நறுமணம் வீசுவது போலவும்இருக்கும். அவளது இமைகளின் சுருக்கங்களைக் கண்டு கண்ணாடிக்கு பதிலாக அவளது கண்களை பார்த்து தலைகோதிய நினைவுகளை நினைத்து மனம்  வருடி கொண்டே இருக்கும். நரை தோன்றிய பிறகும் கூட அவர்களின் காதல் மட்டும் இளமையை தன்னுள் கட்டிப்போட்டு வைத்துக் கொண்டே இருக்கும். அவ்வப்போது அவர்களின் முதல் சந்திப்பின் நினைவுகளை நினைத்து அவளின் கரங்களை பிடித்து "என்னை ஏற்றுக் கொள்வாயா" என்று கேட்ட நிமிடங்களை மனதில் திரையிட்டு தன்னவளுக்கு ஒளி திரையில் பரவ விட்டு உடல் சிலிர்த்துக் கொண்டே இருக்கும். 

காதல் உறவல்ல.. உணர்வு..  காதலுக்கு காலமும் இல்லை, வயதும் இல்லை, பல யுகங்களை தாண்டியும் காதல் வாழ்வதால் தான் மனிதன் மனதில் "மனிதம்" இறுகப்பற்றிக் கொண்டு, ஈரத்துடன் உயிர்த்திருக்கிறது. காலம் உள்ளவரை, அனைவரும் காதலிப்போம் .. உண்மையான காதலுடன்!

சமீபத்திய செய்திகள்

news

Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

news

Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!

news

Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!

news

MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்

news

CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்