M Bharathi Poem: காற்று

Apr 20, 2026,12:15 PM IST

- மு. பாரதி


கண்ணுக்கு தெரியாமல் 

அமைதியாய் 

புவியை சுவாசிக்க 

வைக்கும் 

வளியே


மரங்கள் சோலையானால்

பஞ்சமில்லை 

வளிக்கு


மரங்களின்றி

பாலைவனமானால்

உலகமே

செல்லும் 

வலிக்கு


ஒவ்வொரு 

மனிதனும்

விரும்புவது

நீண்ட ஆயுளை 


நீண்ட 

ஆயுளுக்கு 

தேவையும்

வளியே


பெருந்தொற்று

காலத்தில் 

வளியை

தேடித்தேடி 

அலைந்தோம்




ஆயினும்

மரக்கன்றுகள் 

நட

மறக்கிறோம் 


எதிர்கால சந்ததியினர்

பணம் கொடுத்து முதுகில் 

வளியை சுமக்கின்ற

நிலைக்கு 

தள்ளாமல்


நம்மைப் போலவே 

சுதந்திரமாக 

சுவாசிக்க 


எங்கெங்கிலும்

மரக்கன்றுகளை 

நடுவோம்


புவியை 

பசுமையாக்குவோம்


பூமியை

சோலைவனமாய்

மாற்றுவோம்


வலியின்றி

வளியைப் பெற

வழி வகுப்போம்


(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை 64)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்