- மு. பாரதி
கண்ணுக்கு தெரியாமல்
அமைதியாய்
புவியை சுவாசிக்க
வைக்கும்
வளியே
மரங்கள் சோலையானால்
பஞ்சமில்லை
வளிக்கு
மரங்களின்றி
பாலைவனமானால்
உலகமே
செல்லும்
வலிக்கு
ஒவ்வொரு
மனிதனும்
விரும்புவது
நீண்ட ஆயுளை
நீண்ட
ஆயுளுக்கு
தேவையும்
வளியே
பெருந்தொற்று
காலத்தில்
வளியை
தேடித்தேடி
அலைந்தோம்

ஆயினும்
மரக்கன்றுகள்
நட
மறக்கிறோம்
எதிர்கால சந்ததியினர்
பணம் கொடுத்து முதுகில்
வளியை சுமக்கின்ற
நிலைக்கு
தள்ளாமல்
நம்மைப் போலவே
சுதந்திரமாக
சுவாசிக்க
எங்கெங்கிலும்
மரக்கன்றுகளை
நடுவோம்
புவியை
பசுமையாக்குவோம்
வலியின்றி
வளியைப் பெற
வழி வகுப்போம்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை 64)
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}