M Bharathi Poem: காற்று

Apr 20, 2026,12:15 PM IST

- மு. பாரதி


கண்ணுக்கு தெரியாமல் 

அமைதியாய் 

புவியை சுவாசிக்க 

வைக்கும் 

வளியே


மரங்கள் சோலையானால்

பஞ்சமில்லை 

வளிக்கு


மரங்களின்றி

பாலைவனமானால்

உலகமே

செல்லும் 

வலிக்கு


ஒவ்வொரு 

மனிதனும்

விரும்புவது

நீண்ட ஆயுளை 


நீண்ட 

ஆயுளுக்கு 

தேவையும்

வளியே


பெருந்தொற்று

காலத்தில் 

வளியை

தேடித்தேடி 

அலைந்தோம்




ஆயினும்

மரக்கன்றுகள் 

நட

மறக்கிறோம் 


எதிர்கால சந்ததியினர்

பணம் கொடுத்து முதுகில் 

வளியை சுமக்கின்ற

நிலைக்கு 

தள்ளாமல்


நம்மைப் போலவே 

சுதந்திரமாக 

சுவாசிக்க 


எங்கெங்கிலும்

மரக்கன்றுகளை 

நடுவோம்


புவியை 

பசுமையாக்குவோம்


பூமியை

சோலைவனமாய்

மாற்றுவோம்


வலியின்றி

வளியைப் பெற

வழி வகுப்போம்


(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை 64)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்