பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞர் சங்கம் கண்டனம்

Jul 07, 2024,07:10 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அருகே 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலால், ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது படுகொலை தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முதலில் 8 பேரும், பின்னர் 3 பேரும் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




முதல் கட்ட விசாரணையில் இது பழிக்குப் பழி வாங்கும் கொலை என்று தெரிய வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக சங்கத் தலைவர் ஜி மோகனகிருஷ்ணன் மற்றும் செயலாளர் ஆர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கறிஞர் கே ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டுக்கு வெளியே வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட செயல் குறித்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தோம். இந்த கோரமான கொலைச் செயலை கடுமையாக கண்டிக்கிறோம். காவல்துறை விசாரணையை விரைவுபடுத்தி, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டப்படி அவர்களைத்  தண்டிக்க வேண்டும்.


ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்