சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றலாம், இறக்கலாம். போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களிலிருந்தும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம். அதேசமயம், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள் கண்டிப்பாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குப் போக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல், புதிதாக துவங்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் புறப்படும், வந்து சேரும் என போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதேபோல ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்தே புறப்பட வேண்டும், கிளாம்பாக்கத்திலேயே நிறுத்தப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரதவிட்டது. அதன்படி அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசின் உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி மஞ்சுளா விசாரித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மீஞ்சூரில் தயாராகி வரும் ஆம்னி பஸ் முனையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை தற்காலிகமாக சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.
- கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ் நிறுவனங்களின் பணிமனைகளிலிருந்து பஸ்களை இயக்கலாம்.
- போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. இதுதொடர்பான உத்தரவுகளை அனைத்து பஸ் புக்கிங் செயலி நிறுவனங்களும் தெளிவாக அமல்படுத்த வேண்டும்.
- தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு பயணிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும், அதேபோல இறக்க வேண்டும். இதை கட்டாயம் அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}