சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றலாம், இறக்கலாம். போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களிலிருந்தும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம். அதேசமயம், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள் கண்டிப்பாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குப் போக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல், புதிதாக துவங்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் புறப்படும், வந்து சேரும் என போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதேபோல ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்தே புறப்பட வேண்டும், கிளாம்பாக்கத்திலேயே நிறுத்தப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரதவிட்டது. அதன்படி அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசின் உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி மஞ்சுளா விசாரித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மீஞ்சூரில் தயாராகி வரும் ஆம்னி பஸ் முனையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை தற்காலிகமாக சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.
- கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ் நிறுவனங்களின் பணிமனைகளிலிருந்து பஸ்களை இயக்கலாம்.
- போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. இதுதொடர்பான உத்தரவுகளை அனைத்து பஸ் புக்கிங் செயலி நிறுவனங்களும் தெளிவாக அமல்படுத்த வேண்டும்.
- தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு பயணிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும், அதேபோல இறக்க வேண்டும். இதை கட்டாயம் அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}