கோயம்பட்டில்.. பயணிகளை ஏற்றலாம் இறக்கலாம்.. ஆம்னி  பஸ்களுக்கு.. ஹைகோர்ட் பச்சைக்கொடி!

Feb 10, 2024,12:20 PM IST

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றலாம், இறக்கலாம். போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களிலிருந்தும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம். அதேசமயம், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள் கண்டிப்பாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குப் போக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஜனவரி 24ஆம் தேதி  முதல், புதிதாக துவங்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள்  புறப்படும், வந்து சேரும் என போக்குவரத்து துறை ஆணையர்  உத்தரவிட்டிருந்தார். அதேபோல ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்தே புறப்பட வேண்டும், கிளாம்பாக்கத்திலேயே நிறுத்தப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரதவிட்டது. அதன்படி அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து  இயக்கப்பட்டு வருகிறது.




இந்நிலையில் அரசின் உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி மஞ்சுளா விசாரித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:


மீஞ்சூரில் தயாராகி வரும் ஆம்னி பஸ் முனையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை தற்காலிகமாக சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.


- கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ் நிறுவனங்களின் பணிமனைகளிலிருந்து பஸ்களை இயக்கலாம்.


- போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. இதுதொடர்பான உத்தரவுகளை அனைத்து பஸ் புக்கிங் செயலி நிறுவனங்களும் தெளிவாக அமல்படுத்த வேண்டும்.


- தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு பயணிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும், அதேபோல இறக்க வேண்டும். இதை கட்டாயம் அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்