சென்னை: முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது .
கடந்த 2022 ஆம் ஆண்டு திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக திமுக நிர்வாகி ஒருவர் சிவி சண்முகம் மீது வழக்கு தொடுத்தார். இதன் அடிப்படையில் இரண்டு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல், பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இந்த அவதூறு வழக்கை, ரத்து செய்ய வேண்டும் என சிவி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது சி.வி. சண்முகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜான் சத்யன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றால் அரசு தான் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். மாறாக திமுக நிர்வாகி புகார் கொடுத்துள்ளார் என கூறப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், சிவி சண்முகத்தின் பேச்சு மோசமானது தான். அவரது பேச்சை ஏற்கவில்லை. அதற்காக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய முடியுமா..? என கேள்வி எழுப்பினார். இதற்கு போலீசார், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் படியான சிவி சண்முகத்தின் பேச்சு பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்படியே இருக்கும் என்பதால் இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது என பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதி வேறு பிரிவுகள் ஏதேனும் பொருந்தினால் அதில் வழக்கு பதிவு செய்யுங்கள் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக சிவி சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்
மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?
சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு
{{comments.comment}}