கவனக்குறைவான டிரைவிங்.. மதுரை ஆதீனத்தின் டிரைவர் மீது கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு

May 05, 2025,06:57 PM IST

உளுந்தூர்ப்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே கவனக்குறைவாகவும், அதி வேகமாகவும் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படக் காரணமாக இருந்ததாக மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் மீது உளுந்தூர்ப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடந்தது. மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, கவர்னர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதீனம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நிகழ்ச்சியில் பேசும்போது, தன்னை கொலை செய்ய கார் விபத்து மூலம் சதி நடந்ததாக கூறினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது, இன்னொரு கார் தன் கார் மீது உரசியது என்றும்,  இது திட்டமிட்ட சதி. என்னை கொல்ல விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரிகார்டை உடைத்துக்கொண்டு வந்தனர். விபத்துக்குப் பிறகு நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதில் நான் மயக்கமடைந்துவிட்டேன் என்றார்.


அத்தோடு நில்லாமல், தொப்பி அணிந்து தாடி வைத்த ஒருவர் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்து மோதியதாக தனது டிரைவர் சொன்னதாகவும் ஆதீனம் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசில் புகார் தரவில்லை என்றும், சிவபெருமானிடம் புகார் தந்துவிட்டேன் என்றும் அவர் கூறினார். இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கே சலுகைகள் அதிகம். என் புகாரை எடுக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.


இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கள்ளக்குறிச்சி போலீஸால் விசாரணையில் இறங்கினர். விபத்து நடந்ததாக ஆதீனம் கூறிய இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, ஆதீனம் கூறியது போல எதுவுமே நடக்கவில்லை என்று தெரிந்தது. இதையடுத்து, மதுரை ஆதீனத்தை கொல்ல சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. ஆதீனம் பயணித்த கார் அதிவேகமாக சென்றதால் சிறு விபத்துதான் நடந்தது. ஆதீனம் காரை ஓட்டிய டிரைவரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் கூறினர்.


இதற்கிடையில், மதுரை ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியானது. அதில் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஆதீனத்தின் கார் வேகமாக சென்றது. அப்போது, எதிரே ஒரு வெள்ளை நிற கார் மெதுவாக வந்தது. ஆதீனத்தின் கார் அதி வேகமாக சென்று சாலையை கடந்ததைப் பார்த்து, அந்த சிறிய கார் டிரைவர் காரை சமயோஜிதமாக நிறுத்தி விட்டார். அவர் மட்டும் காரை நிறுத்தாமல் விட்டிருந்தால் மிகப் பெரிய விபத்து நடந்திருக்கும். இதுதான் அந்த சிசிடிவி  கேமராவில் பதிவாகியிருந்த காட்சியாகும். ஆதீனத்தின் டிரைவர் ஏன் அந்த இடத்தில் அத்தனை வேகமாக கிராஸ் செய்தார் என்பது தெரியவில்லை.


இந்த நிலையில் தற்போது, மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் மீது உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டியதாக டிரைவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் புகார் அளித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொங்கல் பரிசுத் தொகுப்புடன்.. ரூ. 3000 ரொக்கமும் தரப்படும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

TAPS: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுத்த ஹேப்பி நியூஸ்.. அறிக்கையின் முழு விவரம்!

news

I am Coming.. திரும்பி போற ஐடியாவே இல்ல.. விஜய்யின் ஜனநாயகன் பட டிரைலர் எப்படி இருக்கு?

news

வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு

news

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு

news

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லத் தயாரா?... 150 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

news

மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல்? நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் புதிய சாதனை

news

காவல்துறையினர் மரியாதை, புன்னகை, அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

news

திமுக தேர்தல் அறிக்கை: மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்