"வராரு அழகர் வராரு"..  ஆற்றில் இறங்கும் கள்ளழகர்.. மதுரைக்கு மே 5ம் தேதி லீவு!

Apr 26, 2023,03:28 PM IST
மதுரை: மதுரையில் உலகப் புகழ் பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5ம் தேதி நடைபறவுள்ள நிலையில் அன்று மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்கி விட்டது. ஏப்ரல் 23ம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி விட்டது. தினந்தோறும் ஒரு வைபவம் என மதுரை மக்கள் திருவிழா மோடில் உலா வந்து கொண்டுள்ளனர். சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சங்கள் - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகியவையே.



வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் மே 5ம் தேதி இறங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.  தற்போது மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, அழகர் மீது தீர்த்தவாரி செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து மதுரை கள்ளழகர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அசுத்தமான தண்ணீரை பீய்ச்சக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  தண்ணீர் மாசு காரணமாக அழகரும், அவர் அமர்ந்து வரும் தங்கக் குதிரையும் சேதமடைவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது அணியும் பட்டும் கூட பேசு பொருளாக இருக்கும். அவர் அணிந்து வரும் பட்டின் நிறத்திற்கேற்ப அந்த ஆண்டு பலன்கள் அமையும் என்பது ஐதீகமாகும். குறிப்பாக பச்சைப் பட்டு அணிந்து ஆற்றில் இறங்கினால் அந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக இருக்கும், மழைக்குப் பஞ்சம் இருக்காது என்பார்கள்.

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வந்ததால் அந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நடைபெறவில்லை. அடுத்த ஆண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த ஆண்டு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத காரணத்தால் மதுரை மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் திருவிழாவுக்காக காத்திருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்