மதுரை: நீட் தேர்வை எதிர்த்து இன்று திமுக சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் மதுரையில் மட்டும் நடைபெறவில்லை. இன்றைக்குப் பதில் 23ம் தேதி அங்கு உண்ணாவிரதம் நடைபெறும்.
நீட் தேர்வை எதிர்த்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இருப்பினும் மதுரையில் உண்ணாவிரதம் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இன்று அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் திமுகவின் போராட்டம் நடைபெற்றால் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படலாம் என்பதால் மதுரையில் மட்டும் போராட்டம் நடைபெறவில்லை. மாறாக ஆகஸ்ட் 23ம் தேதி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். நீட் தேர்வு விலக்கு கோரியும் மத்திய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.
உள்ளங்களின் பிணைப்பு.. சொற்களைக் கடந்த ஓர் உன்னதப் பயணம்!
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி - பிடிவாதம் காட்டும் இடதுசாரிகள்
கேஸ் சிலிண்டர் இல்லை.. பிறந்த நாளும் இல்லை.. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அண்ணாமலை கண்டனம்
பாட்டிலுக்குள் ஒரு உலகம்.. The World in the Bottle
திமுக செந்தில் பாலாஜிக்கு எதிராக விஜய்யின் தவெக துவக்கி உள்ள "டாக்கெட் கரூர்"
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ஓடத் தொடங்கியது.. 18 வருஷக் கனவு பூர்த்தியாச்சு!
அதிமுக கூட்டணிக்கு வர விஜய் போட்ட 2 கன்டிஷன்...தீயாய் பரவும் தகவல்
கெளதம் கம்பீருக்கு உண்மையான சவால் இதுதான்.. வார்னிங் கொடுத்த கங்குலி
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
{{comments.comment}}