மதுரை: நீட் தேர்வை எதிர்த்து இன்று திமுக சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் மதுரையில் மட்டும் நடைபெறவில்லை. இன்றைக்குப் பதில் 23ம் தேதி அங்கு உண்ணாவிரதம் நடைபெறும்.
நீட் தேர்வை எதிர்த்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இருப்பினும் மதுரையில் உண்ணாவிரதம் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இன்று அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் திமுகவின் போராட்டம் நடைபெற்றால் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படலாம் என்பதால் மதுரையில் மட்டும் போராட்டம் நடைபெறவில்லை. மாறாக ஆகஸ்ட் 23ம் தேதி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். நீட் தேர்வு விலக்கு கோரியும் மத்திய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
{{comments.comment}}