மதுரை லேடீஸ் விடுதியில் தீ விபத்தில்.. காயமடைந்த.. ஹாஸ்டல் வார்டன் புஷ்பா மரணம்

Sep 17, 2024,04:55 PM IST

மதுரை: மதுரை கட்ராபாளையத்தில் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதி மேலாளர் புஷ்பா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம்  பகுதியில் விசாகா என்ற மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி 30 ஆண்டுகள் ஆன பழமையான கட்டடத்தில் இயங்கி வந்துள்ளது. இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்துள்ளனர்.இந்தக் கட்டடம் பலவீனமாக இருப்பதால் இதைக் காலி செய்ய வேண்டும் என்று கடந்த வருடமே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 



ஆனாலும் விடுதி உரிமையாளர் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட விடுதிக் கட்டடத்தை மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. மேலும், இந்த தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா ஜெகதீஸ் மற்றும் விடுதி காப்பாளரான புஷ்பா ஆகிய இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விிசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னர் விடுதியில் உள்ள ரெப்ரிஜிரிரேட்டரில் மின்கசிவு ஏற்பட்டு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பரிமளா சௌத்ரி மற்றும் சரண்யா ஆகிய இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று தீக்காயங்களுடன்  அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

சிகிச்சைப் பெற்று வந்த 3 பேரில் விடுதி மேலாளர் புஷ்பா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த தீ விபத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை  3 ஆக உயர்ந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்