மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செல்ல Rapido செயலியில் ரூபாய் 72 என கட்டணம் காட்டப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ரூபாய் 150 கேட்டதால் பயணிகள் அவதிக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி பயணிகள் கூறுகையில், செயலியில் முன்பதிவு செய்த போது குறைந்த கட்டணம் காண்பிக்கப்பட்டது. ஆனால், இடத்திற்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் செயலியில் காட்டிய தொகையை ஏற்க மறுத்து, அதற்கும் இரட்டிப்பு தொகையை கேட்டுள்ளார். பயணிகள் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், ஓட்டுநர் பயணத்தை ரத்து செய்து அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் பயணிகளுக்கு நேர விரயம் ஏற்பட்டதுடன், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அவசர தேவைக்காக மருத்துவமனை செல்ல முயன்ற பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.

மேலும், செயலியில் காட்டப்படும் கட்டணத்தை விட அதிக தொகையை கேட்பது பல ஆட்டோ ஓட்டுநர்களிடமும் வழக்கமாகி விட்டதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது போன்ற செயல்கள் பயணிகளின் நம்பிக்கையை பாதிப்பதோடு, ஆன்லைன் போக்குவரத்து சேவைகளின் நம்பகத் தன்மையையும் கேள்விக் குறியாக்குகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, செயலியில் காட்டப்படும் கட்டணத்திற்கே பயண சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}