டெல்லி: உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜின் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடினார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் 144 வருடங்களுக்குப் பிறகு வரும் மகா கும்பமேளா மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்பட்டு வருகிறது. இந்த வருடம் வந்துள்ள கும்பமேளா நிகழ்ச்சி 144 வருடங்களுக்குப் பிறகு வரும் கும்பமேளாவாகும். இதில், கோடிக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர். இந்த கும்பமேளா கடந்த மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இதுவரைக்கும் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய இந்த ஆன்மீக நிகழ்வில் ஜனாதிபதி திரவுதி முர்மு இன்று பங்கேற்று புனித நீராடினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று பிரயாக்ராஜூக்கு வந்த அவரை, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக படகில் பயணித்த திரவுபதி முர்மு, முதலில் அங்குள்ள பறவைகளுக்கு உணவளித்தார். அதை அடுத்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும், தெலுங்கானா அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கோமதிரெட்டி வெங்கட் ரெட்டியும் திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடினார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி பிரதமர் மோடி 3 முறை மூழ்கி எழுந்து புனித நீராடி வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் புனித நீராடியுள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}