டெல்லி: உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜின் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடினார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் 144 வருடங்களுக்குப் பிறகு வரும் மகா கும்பமேளா மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்பட்டு வருகிறது. இந்த வருடம் வந்துள்ள கும்பமேளா நிகழ்ச்சி 144 வருடங்களுக்குப் பிறகு வரும் கும்பமேளாவாகும். இதில், கோடிக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர். இந்த கும்பமேளா கடந்த மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இதுவரைக்கும் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய இந்த ஆன்மீக நிகழ்வில் ஜனாதிபதி திரவுதி முர்மு இன்று பங்கேற்று புனித நீராடினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று பிரயாக்ராஜூக்கு வந்த அவரை, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக படகில் பயணித்த திரவுபதி முர்மு, முதலில் அங்குள்ள பறவைகளுக்கு உணவளித்தார். அதை அடுத்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும், தெலுங்கானா அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கோமதிரெட்டி வெங்கட் ரெட்டியும் திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடினார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி பிரதமர் மோடி 3 முறை மூழ்கி எழுந்து புனித நீராடி வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் புனித நீராடியுள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!
கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !
புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}