மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

Feb 10, 2025,06:07 PM IST

டெல்லி: உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜின் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடினார்.


உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் 144 வருடங்களுக்குப் பிறகு வரும் மகா கும்பமேளா மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்பட்டு வருகிறது. இந்த வருடம் வந்துள்ள கும்பமேளா நிகழ்ச்சி 144 வருடங்களுக்குப் பிறகு வரும் கும்பமேளாவாகும். இதில், கோடிக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர். இந்த கும்பமேளா  கடந்த மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில்  இதுவரைக்கும் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.


உலகின் மிகப்பெரிய இந்த ஆன்மீக நிகழ்வில் ஜனாதிபதி திரவுதி முர்மு இன்று பங்கேற்று புனித நீராடினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று பிரயாக்ராஜூக்கு வந்த அவரை, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக படகில் பயணித்த திரவுபதி முர்மு, முதலில் அங்குள்ள பறவைகளுக்கு உணவளித்தார். அதை அடுத்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.




உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும், தெலுங்கானா அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கோமதிரெட்டி வெங்கட் ரெட்டியும் திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடினார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி பிரதமர் மோடி 3 முறை மூழ்கி எழுந்து புனித நீராடி வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் புனித நீராடியுள்ளார்கள்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்