மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

Jan 29, 2025,03:42 PM IST

பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா ஜனவரி 13ம் தேதி துவங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை மகாகும்பமேளா நடந்து வருகிறது. பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பதால் மகாகும்ப மேளாவில் புனித நீராட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திரிவேணி சங்கமத்தில் அமாவாசை, பஞ்சமி போன்ற நாட்களில் புனித நீராடினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதனால் தை அமாவாசையான இன்று மிக அதிக அளவிலான மக்கள் அதிகாலையிலேயே புனித நீராட குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.




உலகின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தை அமாவசையான இன்று மட்டும் புனித நீராட கிட்டத்தட்ட 10 கோடிக்கும் அதிகமனோர் கூடி உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. பிரயாக்ராஜில் நிலவும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமித்ஷாவும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் போனில் கேட்டு வருகின்றனர். 


இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்,பிரயாக்ராஜில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அன்புக்குரியோர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 


பிரயாக்ராஜில் உள்ள உள்ளூரில் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கும்ப மேளாவில் மீதமுள்ள நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கலந்துரையாடினேன், மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

news

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

news

துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?

news

இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு

news

பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு

news

ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லங்க இன்றும் குறைவு தான்... அதுவும் சவரன் ரூ. 400 குறைவு!

news

கேரளாவில் பரவும் மூளையை உண்ணும் அமீபா நோய்.. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்