மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

Jan 29, 2025,03:42 PM IST

பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா ஜனவரி 13ம் தேதி துவங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை மகாகும்பமேளா நடந்து வருகிறது. பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பதால் மகாகும்ப மேளாவில் புனித நீராட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திரிவேணி சங்கமத்தில் அமாவாசை, பஞ்சமி போன்ற நாட்களில் புனித நீராடினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதனால் தை அமாவாசையான இன்று மிக அதிக அளவிலான மக்கள் அதிகாலையிலேயே புனித நீராட குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.




உலகின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தை அமாவசையான இன்று மட்டும் புனித நீராட கிட்டத்தட்ட 10 கோடிக்கும் அதிகமனோர் கூடி உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. பிரயாக்ராஜில் நிலவும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமித்ஷாவும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் போனில் கேட்டு வருகின்றனர். 


இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்,பிரயாக்ராஜில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அன்புக்குரியோர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 


பிரயாக்ராஜில் உள்ள உள்ளூரில் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கும்ப மேளாவில் மீதமுள்ள நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கலந்துரையாடினேன், மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!

news

நிமிஷா பிரியா செய்தது மிகப் பெரிய குற்றம்.. மன்னிப்பே கிடையாது.. ஏமன் நாட்டவரின் சகோதரர்

news

நான் எடுப்பது தான் முடிவு... கூட்டணி ஆட்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு: டாக்டர் அன்புமணி

news

பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு... ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு

news

யூடியூபர்களுக்கு வந்த புது சிக்கல்... இனி ஈஸியா காசு பாக்க முடியாது

news

விஜய் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. மதுரை மாநாட்டு தேதி ஸ்பெஷல்.. விஜயகாந்த் பிறந்த நாள் + கல்யாண நாள்!

news

தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க... இன்றும் குறைவு தான்...மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக திமுக கூட்டணிக்கு விழும்.. திருமாவளவன் உத்தரவாதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்