சீனாவுக்குப் போகும்.. தமிழர்களின் மனம் கவர்ந்த மகாராஜா.. விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி!

Nov 21, 2024,11:23 AM IST

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தினை சீனா முழுவதும் திரையரங்குகளில் வரும் 29ஆம் தேதி ஒய் சி பிலிம்ஸ் நிறுவனம், அலிபாபா பிக்சர்ஸ் உடன் இணைந்து வெளியிடுகிறது.


இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் தான் மகாராஜா. இப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதேபோல் வசூலிலும் 100 கோடிக்கு மேல் வாரி குவித்தது.




குப்பைத் தொட்டியை மையமாகக் கொண்டு உருவாகிய கதை நகர்வில் நடிகர் விஜய் சேதுபதி தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் கடைசி பத்து நிமிட  காட்சிகளில் பல தரப்பு மக்களிடையே பாராட்டு பெற்றார். இயக்குனர் நித்திலனும் கடைசி 10 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகளில் டிவிஸ்டுக்கு மேல் டுவிஸ்ட் வைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பார்.


ஃபேஷன் ஸ்டூடியோஸ் திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ரூட் நிறுவனங்கள் தயாரிப்பில் பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இப்படம் நடிகர் விஜய் சேதுபதிக்கு 50-வது திரைப்படம். இவருடன் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் சிங்கம் புலி கதாபாத்திரமும் இவரா அது என அதிர வைத்தது. அந்த அளவுக்கு படத்தின் அடுத்தடுத்த கதை நகர்வுகள் படத்திற்கு பிளஸ். 


மகாராஜா திரைப்படம் மாறுபட்ட கதைக்களத்தில், அதிரடியான இசை, அற்புதமான காட்சி அமைப்பு, என சொல்லிக்கொண்டே போகலாம். விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனாவின் நடிப்பும் அபாரமாக இருந்தது. இப்படம் ஜூலை 12ஆம் தேதி ஓடிடியில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.


மெல்போன் திரைப்பட விழாவில், திரையிட்ட மகாராஜா திரைப்படத்திற்கான சிறந்த இயக்குனருக்கான விருதையும் தட்டிச் சென்றார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். அனைத்து தரப்பிலும் பல்வேறு பாராட்டுகளை குவித்த மகாராஜா படத்தை ஒய்.சி ஃபிலிம்ஸ் நிறுவனம் அலிபாபா பிக்சர்ஸ் உடன் இணைந்து தமிழ் இந்திய கலாச்சார பண்முகத் தன்மையை உலகமெங்கும் அறிமுகப்படுத்தும் நோக்கில் சீனா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளி வர தயாராக இருக்கிறது. 


இதற்காக திரைப்பட ஆர்வலர்கள் உள்ளூர் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பு விளம்பரங்கள் மற்றும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து Yi Shi Films நிறுவனத்தைச் சேர்ந்த அலெக்ஸி வூ கூறுகையில், மகாராஜாவை சீனாவிற்கு கொண்டு  வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படம் மூலம்  சீனாவில் தமிழ் சினிமாவின் கலைத்திறனை, புதிய பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. அலிபாபா பிக்சர்ஸ் உடன் இணைந்து, உலகின் சிறந்த சினிமாக்களை, உலகம்

முழுக்கவுள்ள பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி என கூறியுள்ளார். 


பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறுகையில், மகாராஜா  எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியான படைப்பாகவும், பெருமையின் அடையாளமாக மாறியது. சிறந்த கதையம்சம் கொண்ட நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை, பல்வேறு பின்னணியில் உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும்படியான படங்களை, உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்.  மகாராஜா பெரும் அன்பையும், வரவேற்பையும் பெற்றது. 


தற்போது இப்படம் சீனாவில் உள்ள ரசிகர்களைக்  கவரும் வகையில்,  நவம்பர் 29 ஆம் தேதி வெளியாவது மகிழ்ச்சி.   மகாராஜா படத்தினை சீனாவில் மிகப்பெரிய அளவில் வெளிடுயிடும் Yi Shi Films மற்றும் Alibaba Pictures நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நன்றி.  உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன், அதிரடி திருப்பங்களுடன் இப்படம் சீனா ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். சீன ரசிகர்களது வரவேற்பைக் காண ஆவலுடன் உள்ளோம். இந்த நேரத்தில் இப்படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கிய விஜய் சேதுபதி, இயக்குநர் நித்திலன் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்