மகராஷ்டிராவில்.. பெண் எம்எல்சியை.. பின்னாலிருந்து தாக்கிய மர்ம நபர்!

Feb 09, 2023,03:01 PM IST
அவுரங்காபாத்: காங்கிரஸ் பெண் எம்எல்சியை பின்னாலிருந்து தாக்கியுள்ளார் ஒரு நபர். இதில் அந்த பெண் எம்எல்சி காயமடைந்தார்.



மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதன்யா ராஜீவ் சதாவ். இவர் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்எல்சி ஆவார். 

இவர் ஹிங்கோலி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத  40 வயது நபரால் தாக்கப்பட்டுள்ளார். பிரதன்யாவை பின்னாலிருந்து தாக்கினார் அந்த நபர். அவரை உடனடியாக போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக பிரதன்யா போட்டுள்ள டிவீட்டில், கப்சே தவன்டா கிராமத்தில் நான் ஒரு நபரால் தாக்கப்பட்டேன். அந்த நபர் யார் என்று தெரியவில்லை. பின்னாலிருந்து அவர் என்னைத் தாக்கினார்.  என்னை காயப்படுத்தவும்,உயிரைப் பறிக்கவும் நடந்த முயற்சி இது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். முன்னாலிருந்து தாக்காமல் கோழைத்தனமாக பின்னாலிருந்து அதுவும் ஒரு பெண்ணைத் தாக்கியுள்ளார் என்று கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மகேந்திரா டோங்கர்டிவே.  அந்த நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்