மகராஷ்டிராவில்.. பெண் எம்எல்சியை.. பின்னாலிருந்து தாக்கிய மர்ம நபர்!

Feb 09, 2023,03:01 PM IST
அவுரங்காபாத்: காங்கிரஸ் பெண் எம்எல்சியை பின்னாலிருந்து தாக்கியுள்ளார் ஒரு நபர். இதில் அந்த பெண் எம்எல்சி காயமடைந்தார்.



மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதன்யா ராஜீவ் சதாவ். இவர் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்எல்சி ஆவார். 

இவர் ஹிங்கோலி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத  40 வயது நபரால் தாக்கப்பட்டுள்ளார். பிரதன்யாவை பின்னாலிருந்து தாக்கினார் அந்த நபர். அவரை உடனடியாக போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக பிரதன்யா போட்டுள்ள டிவீட்டில், கப்சே தவன்டா கிராமத்தில் நான் ஒரு நபரால் தாக்கப்பட்டேன். அந்த நபர் யார் என்று தெரியவில்லை. பின்னாலிருந்து அவர் என்னைத் தாக்கினார்.  என்னை காயப்படுத்தவும்,உயிரைப் பறிக்கவும் நடந்த முயற்சி இது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். முன்னாலிருந்து தாக்காமல் கோழைத்தனமாக பின்னாலிருந்து அதுவும் ஒரு பெண்ணைத் தாக்கியுள்ளார் என்று கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மகேந்திரா டோங்கர்டிவே.  அந்த நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!

news

திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!

news

மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

news

அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்

news

பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?

news

தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!

news

த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!

news

இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?

news

எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்