பாகிஸ்தானில் திடீர் மின் தடை.. இஸ்லாமாபாத், கராச்சி,லாகூர் ஸ்தம்பிப்பு

Jan 23, 2023,01:55 PM IST
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இன்று காலை உள்ளூர் நேரப்படி 7.35 மணிக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. தேசிய  மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் பல மணி நேரம் மின்சாரம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டன.

மின்விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், உள்ளூர் நேரப்படி 7.34க்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. 

சில ஊர்களில் மின் விநியோகம் சரியானதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அங்கு மின்சாரம் சரியாக வரவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.  அரை கரண்ட்டாக வருவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு தொடர்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

news

பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

news

த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை

news

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்

news

சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

news

கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

அதிகம் பார்க்கும் செய்திகள்