பாகிஸ்தானில் திடீர் மின் தடை.. இஸ்லாமாபாத், கராச்சி,லாகூர் ஸ்தம்பிப்பு

Jan 23, 2023,01:55 PM IST
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இன்று காலை உள்ளூர் நேரப்படி 7.35 மணிக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. தேசிய  மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் பல மணி நேரம் மின்சாரம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டன.

மின்விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், உள்ளூர் நேரப்படி 7.34க்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. 

சில ஊர்களில் மின் விநியோகம் சரியானதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அங்கு மின்சாரம் சரியாக வரவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.  அரை கரண்ட்டாக வருவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு தொடர்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்