பாகிஸ்தானில் திடீர் மின் தடை.. இஸ்லாமாபாத், கராச்சி,லாகூர் ஸ்தம்பிப்பு

Jan 23, 2023,01:55 PM IST
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இன்று காலை உள்ளூர் நேரப்படி 7.35 மணிக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. தேசிய  மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் பல மணி நேரம் மின்சாரம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டன.

மின்விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், உள்ளூர் நேரப்படி 7.34க்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. 

சில ஊர்களில் மின் விநியோகம் சரியானதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அங்கு மின்சாரம் சரியாக வரவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.  அரை கரண்ட்டாக வருவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு தொடர்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்