கொச்சி: மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பு நடந்த தேர்தலில் போட்டியின்றி 3வது முறையாக தலைவராக நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மலையாள நடிகர் சங்கம் அம்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அந்த அமைப்பின் பொதுச் செயலாளராக 8 முறை இருந்தவர் நடிகர் பாபு. இவர் தானாக முன்வந்து தனது பதவியை நிறைவு செய்தார். அத்துடன் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார். இவருக்கு பின்னர் நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகர் குக்கு பரமேஸ்வரன், உண்ணி சிவபால் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் நடிகர் சித்திக் நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தலைவர் பதவிக்கு பலர் போட்டியிட்டனர். அப்போது நடிகர் மோகன்லால் தேர்தலில் போட்டியிட தயாரான உடன் மற்றவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து மனுவை வாபஸ் பெற்றனர். அன்றிலிருந்து இன்று வரை நடிகர் மோகன்லால் போட்டியின்றி மலையாள நடிகர் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். அம்மா அமைப்பின் வருடாந்திர பொதுக்கழு கூட்டம் கொச்சியில் உள்ள கோகுலம் கருத்தரங்க மையத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து திரைப்பிரபலங்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
மோகன்லால், மஞ்சு வாரியர், விஜய் பாபு, லால், இந்திரஜித் டொவினோ தாமஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான வாக்களிப்பும் நடைபெற்றது. அதில், இம்முறையும் நடிகர் மோகன்லால் எதிர்ப்பின்றி அம்மா அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளர் பதவிக்கு உன்னி முகுந்தன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக நடிகர் சித்திக் தேர்வு செய்யப்பட்டார்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}