திருவனந்தபுரம்: மலையாள டிவி கலைஞர்களான கிருஷ் வேணுகோபாலும், திவ்யா ஸ்ரீதரும் திருமணம் செய்து கொண்டதை சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஏன் இந்த திருமணத்தை விமர்சிக்கிறார்கள் என்ற கேள்வி வரலாம்.. காரணம் இவர்களின் வயது வித்தியாசம்.
மலையாள சின்னத்திரையில் பிரபலமானவர்கள் வேணுகோபாலும் திவ்யாவும். இருவரும் பத்தரமாத்து என்ற தொடரில் நடித்தபோது காதல் கொண்டனர். இந்தக் காதல் வலுவடைந்து தற்போது திருமணத்தில் முடிவடைந்துள்ளது. திவ்யாவுக்கு இது 2வது திருமணமாகும். முதல் திருமண் மூலம் அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

திவ்யா- கிருஷ் திருமணம் குருவாயூரில் சிம்பிளாக நடந்தது. இரு வீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். இந்தத் திருமணம் சமூக வலைதளங்களில் பலராலும் டிரோல் செய்யப்பட்டு வருகிறது. காரணம் இவர்களின் வயது வித்தியாசம். கிட்டத்தட்ட இருவருக்கும் இடையே 10 வயது வித்தியாசம் உள்ளது. கிருஷுக்கு 50 வயதாகிறது, திவ்யாவுக்கு 40 வயதாகிறது. இதனால்தான் இவர்களது திருமணத்தை டிரோல் செய்கின்றனர்.
ஆனால் இதுகுறித்து எங்களுக்குக் கவலை இல்லை.. எங்களை கேலி செய்வோருக்கு எங்களது வாழ்த்துகள் என்று கூறி அதிரடி காட்டியுள்ளனர் திவ்யாவும், கிருஷ்ஷும். கிருஷ் வேணுகோபால் நடிகர் மட்டுமல்லாமல் புத்தகமும் எழுதியுள்ளார். வாய்ஸ் ஆர்ட்டிஸ்ஸ்டாகவும் இருக்கிறார். மறுபக்கம் திவ்யா பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். நெகட்டிவ் ரோல்களிலும் கலக்கியவர். பத்தரமாத்து தொடரிலும் கூட நெகட்டிவ் ரோலில்தான் நடித்திருந்தார் திவ்யா.
தனது திருமணம் குறித்து திவ்யா கூறுகையில் வாழ்க்கையில் நான் நிறைய பார்த்து விட்டேன். இந்தத் திருமணத்தையும் கேலி செய்யவே செய்வார்கள். குடும்பத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்று கூட சொல்வார்கள். உண்மையில் எனக்கு எனது குடும்பத்தார் ஆதரவாக உள்ளனர். அவர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது என்றார் திவ்யா.
இரு மனம் இணைவதுதானே திருமணம்.. இதை ஏன் கேலி செய்ய வேண்டும்.. வயது வித்தியாசம் இரு மனங்களின் இணைப்புக்கு எப்படி இடையூறாக இருக்க முடியும். உருவத்தையும், வயதையும் வைத்து கிருஷ் வேணுகோபாலை பலரும் கிண்டல் செய்வதற்கு பலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?
மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!
அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!
திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை
பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!
17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்
மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை
சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்
மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!
{{comments.comment}}