42 நாடுகளுக்குப் போன பிரதமர் மோடி.. மணிப்பூருக்கு மட்டும் செல்லாதது ஏன்.. கார்கே கேள்வி

Jul 19, 2025,08:43 PM IST

மைசூரு:  பிரதமர் நரேந்திர மோடி 42 நாடுகளுக்கு மேல் போயுள்ளார். ஆனால் மணிப்பூருக்குப் போக மட்டும் அவர் மறுக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.


கர்நாடகா மாநிலம் மைசூருவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.


கார்கே பேசுகையில், பிரதமர் மோடி 42 நாடுகளுக்கு சென்றுள்ளார். ஆனால் மணிப்பூருக்கு செல்லவில்லை. மணிப்பூரில் ஒரு வருடத்திற்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது. மத்திய அரசு இந்த விஷயத்தை சரியாக கையாளவில்லை.




இந்திய மக்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை, அரசியல் சாசனத்தை மாற்ற அனுமதிக்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியில் மக்கள் வேலை செய்தார்கள். ஆனால் மோடியின் பாஜக ஆட்சியில் மக்கள் பேசுகிறார்கள்.


கர்நாடக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக அரசு திவாலாகவில்லை. கர்நாடக அரசு நல்ல நிலையில் உள்ளது என்றார் கார்கே.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்