மைசூரு: பிரதமர் நரேந்திர மோடி 42 நாடுகளுக்கு மேல் போயுள்ளார். ஆனால் மணிப்பூருக்குப் போக மட்டும் அவர் மறுக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் மைசூருவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
கார்கே பேசுகையில், பிரதமர் மோடி 42 நாடுகளுக்கு சென்றுள்ளார். ஆனால் மணிப்பூருக்கு செல்லவில்லை. மணிப்பூரில் ஒரு வருடத்திற்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது. மத்திய அரசு இந்த விஷயத்தை சரியாக கையாளவில்லை.

இந்திய மக்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை, அரசியல் சாசனத்தை மாற்ற அனுமதிக்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியில் மக்கள் வேலை செய்தார்கள். ஆனால் மோடியின் பாஜக ஆட்சியில் மக்கள் பேசுகிறார்கள்.
கர்நாடக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக அரசு திவாலாகவில்லை. கர்நாடக அரசு நல்ல நிலையில் உள்ளது என்றார் கார்கே.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
ஐங்கரன் (நெடுங்கதை)
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
{{comments.comment}}