நீதித்துறையில் தலையிட முயற்சிக்கிறது மத்திய அரசு .. மமதா பானர்ஜி சாடல்

Jan 18, 2023,04:43 PM IST
கொல்கத்தா: நீதிபதிகள் நியமனத்தில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று மத்திய அரசு கேட்பது நீதித்துறை  நடவடிக்கைகளில் தலையிடும் செயல் என்று மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.



நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியத்தில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று மத்திய அரசு  கோரியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், கொலீஜியம் முறையை சீர்குலைக்க மத்தியஅரசு முயல்கிறது. அதில் தனது பிரதிநிதியை இணைக்க மத்திய அரசு விரும்புவது சரியல்ல. இது நீதித்துறை நடவடிக்கையில் தலையிடும் செயலாகும். நீதிமன்றங்களின் செயல்பாட்டில் தலையிட மத்திய அரசு விரும்புகிறது.

நீதித்துறையின் சுதந்திரத்தைக் காக்க வேண்டும். நீதித்துறைக்கு ஆதரவாக நான் இருக்கிறேன்.  மத்திய அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டால்  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசுகள் தலையிடும் நிலை வரும், இதனால் நீதிபதிகள் நியமனமே கேலிக்கூத்தாகி விடும், எந்த மதிப்பும் இருக்காது என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்