நீதித்துறையில் தலையிட முயற்சிக்கிறது மத்திய அரசு .. மமதா பானர்ஜி சாடல்

Jan 18, 2023,04:43 PM IST
கொல்கத்தா: நீதிபதிகள் நியமனத்தில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று மத்திய அரசு கேட்பது நீதித்துறை  நடவடிக்கைகளில் தலையிடும் செயல் என்று மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.



நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியத்தில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று மத்திய அரசு  கோரியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், கொலீஜியம் முறையை சீர்குலைக்க மத்தியஅரசு முயல்கிறது. அதில் தனது பிரதிநிதியை இணைக்க மத்திய அரசு விரும்புவது சரியல்ல. இது நீதித்துறை நடவடிக்கையில் தலையிடும் செயலாகும். நீதிமன்றங்களின் செயல்பாட்டில் தலையிட மத்திய அரசு விரும்புகிறது.

நீதித்துறையின் சுதந்திரத்தைக் காக்க வேண்டும். நீதித்துறைக்கு ஆதரவாக நான் இருக்கிறேன்.  மத்திய அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டால்  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசுகள் தலையிடும் நிலை வரும், இதனால் நீதிபதிகள் நியமனமே கேலிக்கூத்தாகி விடும், எந்த மதிப்பும் இருக்காது என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்