நீதித்துறையில் தலையிட முயற்சிக்கிறது மத்திய அரசு .. மமதா பானர்ஜி சாடல்

Jan 18, 2023,04:43 PM IST
கொல்கத்தா: நீதிபதிகள் நியமனத்தில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று மத்திய அரசு கேட்பது நீதித்துறை  நடவடிக்கைகளில் தலையிடும் செயல் என்று மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.



நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியத்தில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று மத்திய அரசு  கோரியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், கொலீஜியம் முறையை சீர்குலைக்க மத்தியஅரசு முயல்கிறது. அதில் தனது பிரதிநிதியை இணைக்க மத்திய அரசு விரும்புவது சரியல்ல. இது நீதித்துறை நடவடிக்கையில் தலையிடும் செயலாகும். நீதிமன்றங்களின் செயல்பாட்டில் தலையிட மத்திய அரசு விரும்புகிறது.

நீதித்துறையின் சுதந்திரத்தைக் காக்க வேண்டும். நீதித்துறைக்கு ஆதரவாக நான் இருக்கிறேன்.  மத்திய அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டால்  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசுகள் தலையிடும் நிலை வரும், இதனால் நீதிபதிகள் நியமனமே கேலிக்கூத்தாகி விடும், எந்த மதிப்பும் இருக்காது என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்