நீதித்துறையில் தலையிட முயற்சிக்கிறது மத்திய அரசு .. மமதா பானர்ஜி சாடல்

Jan 18, 2023,04:43 PM IST
கொல்கத்தா: நீதிபதிகள் நியமனத்தில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று மத்திய அரசு கேட்பது நீதித்துறை  நடவடிக்கைகளில் தலையிடும் செயல் என்று மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.



நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியத்தில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று மத்திய அரசு  கோரியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், கொலீஜியம் முறையை சீர்குலைக்க மத்தியஅரசு முயல்கிறது. அதில் தனது பிரதிநிதியை இணைக்க மத்திய அரசு விரும்புவது சரியல்ல. இது நீதித்துறை நடவடிக்கையில் தலையிடும் செயலாகும். நீதிமன்றங்களின் செயல்பாட்டில் தலையிட மத்திய அரசு விரும்புகிறது.

நீதித்துறையின் சுதந்திரத்தைக் காக்க வேண்டும். நீதித்துறைக்கு ஆதரவாக நான் இருக்கிறேன்.  மத்திய அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டால்  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசுகள் தலையிடும் நிலை வரும், இதனால் நீதிபதிகள் நியமனமே கேலிக்கூத்தாகி விடும், எந்த மதிப்பும் இருக்காது என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்