புதுடில்லி: நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மக்களவையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பிக்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவையில் இரு இளைஞர்கள் வண்ணப் புகை குண்டுகளை வீசி பெரும் பரபரப்பு ஏற்படுத்தினர். இதில் சம்மந்த பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் எப்படி இப்படி பாதுகாப்பு குறைபாடுகள் நடந்தது என்று பல்வெறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல்கள் நடந்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சி எம்.பிக்கள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.

லோக்சபாவைப் பொறுத்தவரை முதலில் 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் 33 பேர் சஸ்பெண்ட் ஆனார்கள். இன்று மேலும் 50 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ராஜ்யசபாவையும் சேர்த்து தற்போது 142 எம்.பிக்கல் இதுவரை சஸ்பெண்ட் ஆகியுள்ளனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
இன்று, திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், ஜெகத்ரட்சகன், தனுஷ் குமார், கணேசன் மூர்த்தி, சுப்ரியா சுலே, சசி தரூர் உள்ளிட்ட 50 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை காணாத அளவில் ஒரே கூட்ட தொடரில் 142 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
{{comments.comment}}