தொடர் மழை.. வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி.. மக்கள் தவிப்பு.. மீட்புப் பணிகள் தீவிரம்

Dec 18, 2023,01:21 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக பெய்த தொடர் மழையால், தூத்துக்குடி நகரில் அநேக இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகின்றன.


தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வழ்க்கை பாதிக்கப்பட்டது. 


வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே மக்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது. கனமழையால் அணைகள் நிரம்பி அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பல மணி நேரம் நீடித்த மழையால் மக்கள் தவித்து வருகின்றனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 




வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தற்போது விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 


தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழையால் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள தெருக்களில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் சென்றதால் மக்கள் வெளியே வர முடியாமல் முடங்கினர். கடைகள் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. சாத்தான்குளம், அண்ணாநகர் பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் அந்தப் பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். 


பேய்குளம், கருங்குடல், அரசூர், பழனியபுரம், பண்ணம்பாறை, தட்டார் மடம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களும் மழை நீர் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். மின்சாரம் முழுமையாக தடைப்பட்டது. சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சாலைகளில் மரங்களும் விழுந்துள்ளன.


சென்னையிலிருந்து தூத்துக்குடி வரும் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  காலை 11:55க்கு மணிக்கு வர வேண்டிய விமானம் மதுரைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோல மாலை 4 மணிக்கு வர வேண்டிய விமானம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். இதே போல் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்