மார்கழி 04ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 04 வரிகள்

Dec 19, 2025,10:20 AM IST

மார்கழி மாதத்தின் நான்காம் நாள் வழிபாட்டில் பாட வேண்டிய திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் இதோ...


திருப்பாவை பாடல் 04 : 


ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து

பாழியம் தோளுடை பற்பநாபன் கையில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


விளக்கம் : 


மேகத்திற்கு அதிபதியாக இருக்கின்ற பர்ஜன்ய தேவனே, கடலில் இருந்து உற்பத்தியாகும் எங்கள் மழையாகிய தெய்வமே, நீ சிறிதும் எங்கள் விருப்பங்களை மறுக்காது நிறைவேற்றுவாயாக… கடலில் புகுந்து அனைத்து நீரையும் முகந்து எடுத்துக்கொண்டு மேலே சென்று ஊழிக் காலத்தில் முதற்பொருள் இருக்கும் எங்கள் நாரணன் உருவத்தை போல் உருவம் கறுத்து வலிமைமிக்க தோள்களை உடையவரும், நாபிக் கமலத்திற்கு உரியவரின் கரங்களில் இருக்கும் பிரகாசமான ஒளியை கொண்ட சக்கரத்தை போல் மின்னலை உருவாக்கியும், அவரிடம் இருக்கும் வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியினை எழுப்பியும்… தோல்வியை தழுவுவதா? இன்றளவும் வெற்றியை மட்டும் நிலைநாட்டிக் கொண்டிருக்கும் சார்ங்கம் உலகளந்த பெருமானின் கரங்களில் வெளிப்படும் அம்புகளின் தொகுதியைப்போல உலகத்தவர் செழிப்புடன் வாழ நீ மழை பெய்ய செய்வாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம் என்று எண்ணி நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராட போகிறோம் என்கிறாள் ஆண்டாள்.




திருவெம்பாவை பாடல் 04 :


ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உள்நோக்கு நின்றுருக யாம்மாட்டோ ம் நியேவந்(து)

எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.


விளக்கம் : 


ஒளி வீசும் சிரிப்பை உடைய பெண்ணே இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா? என கேட்கிறாள் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை எழுப்ப வந்த பெண். அதற்கு வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்கும் தோழி, அதெல்லாம் இருக்கட்டும். கிளிகளை போல் கொஞ்சி பேசும் தோழிகள் அனைவரும் வந்து விட்டார்களா? எத்தனை பேர் வந்துள்ளார்கள் என பதில் கேள்வி கேட்கிறாள். அதற்கு வெளியில் காத்திருக்கும் பெண், எவ்வளவு பேர் வந்திருக்கிறார் என எண்ணிக் கொண்டிருக்க நேரம் இல்லை. விண்ணவர்களுக்கு அரும் மருந்தாகவும், வேதங்கள் அனைத்திற்கும் பொருளாகவும் , எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காத நம்முடைய சிவ பெருமானை பாடி, வழிபட வேண்டிய நேரமிது. வீணாண பேச்சுக்களை பேசி பொழுதை வீணடிக்காதே. நீ எதிர்பார்க்கும் அளவிற்கு அனைவரும் வந்து விட்டார்கள். வந்து நீயே எண்ணி பார்த்துக் கொள். அப்படி குறைவாக இருந்தால் நீ மீண்டும் சென்று தூங்கிக் கொள் என்கிறாள் பொய்யான கோவம் காட்டி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!

news

கண்ணாடியே.. நான் வந்து நிற்கிறேன் உன் முன்னாடியே.. CONVERSATION WITH THE MIRROR!!

news

துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்...பொங்கல் பண்டிகை முதல் துவக்கம்

news

சற்று குறைந்தது தங்கம் விலை... தங்கம் மட்டும் இல்லங்க வெள்ளியும் இன்று குறைவு தான்!

news

மார்கழிப் பூவே.. மார்கழிப் பூவே.. The Significance of Marghazhi!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 19, 2025... இன்று அனுமன் ஜெயந்தி 2025

news

மார்கழி 04ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 04 வரிகள்

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்