மார்கழி 30 திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 : புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்

Jan 13, 2025,04:09 PM IST

-ஸ்வர்ணலட்சுமி


திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 :


புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி

திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்

நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!




பொருள் : 


பூமியில் பிறந்த அடியாளர்கள் அனைவரும் சிவனை போற்றி பாடி, அவருடைய அருளை பெறுகிறார்கள். ஆனால் பூமியில் வந்து பிறக்காத காரணத்தால் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என  திருமாலும், அவரது நாபிக் கமலத்தில் பிறந்த நான்முகனான பிரம்மாவும் வருந்துகின்றனர். திருப்பெருந்துறையில் இருக்கும் சிவ பெருமானே! அவர்களுக்கு கிடைக்காத உன்னுடைய உண்மையான அருளை இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வழங்கிக் கொண்டிருக்கிறார். எவருக்கும் கிடைக்காத அமுதம் போன்றவனே, உன்னுடைய திருக்கண்கள் திறந்து எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆவேசம், அடுக்கடுக்கான கேள்விகள்...வேலூரில் கொந்தளித்த விஜய்...கோபத்திற்கு இது தான் காரணமா?

news

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் 2026 வெளியீடு...மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்

news

விஜய்க்கு எங்கு சென்றாலும் வேல் பரிசு...பாஜக ஓட்டுக்களை குறி வைக்கிறதா தவெக?

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு என்ன தெரியுமா?

news

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: யாருக்கு லாபம்? பாதிக்கப்பட போகும் ராசிகள் யார்?

news

ஜெயலலிதா இடத்தில் விஜய்...செங்கோட்டையனின் சட்டை பையை கவனிச்சீங்களா?

news

தமிழகத்தில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

news

வேலூரில் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்