மார்கழி 30 திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 : புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்

Jan 13, 2025,04:09 PM IST

-ஸ்வர்ணலட்சுமி


திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 :


புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி

திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்

நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!




பொருள் : 


பூமியில் பிறந்த அடியாளர்கள் அனைவரும் சிவனை போற்றி பாடி, அவருடைய அருளை பெறுகிறார்கள். ஆனால் பூமியில் வந்து பிறக்காத காரணத்தால் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என  திருமாலும், அவரது நாபிக் கமலத்தில் பிறந்த நான்முகனான பிரம்மாவும் வருந்துகின்றனர். திருப்பெருந்துறையில் இருக்கும் சிவ பெருமானே! அவர்களுக்கு கிடைக்காத உன்னுடைய உண்மையான அருளை இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வழங்கிக் கொண்டிருக்கிறார். எவருக்கும் கிடைக்காத அமுதம் போன்றவனே, உன்னுடைய திருக்கண்கள் திறந்து எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

ஐகோர்டில் வழக்காடு மொழியாக தமிழ்...முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு

news

கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிரான வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி

news

விரைவில் புதிய தலைமை செயலகம் : 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

news

தீபாவளி 2026: சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்!

news

வானத்திலே சிறகடிப்போம் வாங்க மச்சானே

news

Light House.. சிங்காரச் சென்னையின் மின்னும் கண்கள்..!

news

கொள்ளை கொள்ளையாய் நல்ல பயன்கள் நல்கும் தாயே!

news

உனக்கென வசந்தம் உன்மனமே.. எல்லாம் உன்வசமே....!

news

என் நாட்குறிப்பிலிருந்து.. நிழலாடிய குந்தவை நாச்சியார்.. மறக்க முடியாத தஞ்சை பயணம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்