-ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 :
புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

பொருள் :
பூமியில் பிறந்த அடியாளர்கள் அனைவரும் சிவனை போற்றி பாடி, அவருடைய அருளை பெறுகிறார்கள். ஆனால் பூமியில் வந்து பிறக்காத காரணத்தால் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என திருமாலும், அவரது நாபிக் கமலத்தில் பிறந்த நான்முகனான பிரம்மாவும் வருந்துகின்றனர். திருப்பெருந்துறையில் இருக்கும் சிவ பெருமானே! அவர்களுக்கு கிடைக்காத உன்னுடைய உண்மையான அருளை இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வழங்கிக் கொண்டிருக்கிறார். எவருக்கும் கிடைக்காத அமுதம் போன்றவனே, உன்னுடைய திருக்கண்கள் திறந்து எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வேற்றுமையில் ஒற்றுமை (சிறுகதை)
நேச மச்சான்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!
Short Story: கோமாளி!
எனக்கே...எனக்கு!
டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரமடைந்த போராட்டம்: நாடாளுமன்ற கதவுகள் மூடல்
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி? முதலமைச்சர் விஜயுடன் முக்கிய ஆலோசனை!
"சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?" – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
நானும் எழுதினேன்!
{{comments.comment}}