- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 3 :
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகைகளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள் :
பூங்குயில்கள், கோழிகள் ஆகியன பொழுது விடிந்ததை உணர்த்திடும் வகையில் கூவ துவங்கி விட்டன. குருகுப் பறவைகளும் சத்தமிட துவங்கி விட்டன. சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறது. நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் கலந்து, அதனுடன் ஒன்று பட்டது போல், நானும் என்னுடைய மனதில் உன்னை மட்டுமே காண வேண்டும் என்ற விருப்பத்தை மனதில் நிறைத்து வைத்துள்ளேன். எனக்கு நீ உன் திருவடியைக் காட்டு. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! திருப்பெருந்துறையில் கோடி கொண்டிருக்கும் சிவ பெருமானே! உறக்கத்தில் இருந்து எழுவாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Work from Home: நவீன வாழ்வியலின் வரப்பிரசாதம்.. ஆனால் அதன் அருமை பலருக்குப் புரியலையே!
தொகுதியின் பெயருக்குப் பின் ப்ராக்கெட் தேவையில்லை .. முதல்வருக்கு விசிக எம்.பி கோரிக்கை
சிந்தனைச் சிதறல்.. தெரியாமல் இருப்பதைவிட, தெரிந்துகொள்ள முயலாமல் இருப்பதே ஆபத்தானது!
தலை சீவி பொட்டு வச்சு தாலிக்கு மஞ்சள தொட்டு வச்சு!
அண்ணன்.. காலம் நல்கிய அற்புதப் பரிசு!
ஜொலிக்கும் நட்சத்திரங்கள்!
என்ன கண்டாய் என்னவளே!
அன்பாய் மோதல் அழியாக் காதல்!
சுமை
{{comments.comment}}