மார்கழி 23 திருப்பள்ளியெழுச்சி பாடல் 3 : கூவின பூங்குயில் கூவின கோழி

Jan 06, 2025,05:04 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பள்ளியெழுச்சி பாடல் 3 :


கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

ஓவின தாரகைகளி ஒளி உதயத்து

ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்

தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!

யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.




பொருள் : 


பூங்குயில்கள், கோழிகள் ஆகியன பொழுது விடிந்ததை உணர்த்திடும் வகையில் கூவ  துவங்கி விட்டன. குருகுப் பறவைகளும் சத்தமிட துவங்கி விட்டன. சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறது. நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் கலந்து, அதனுடன் ஒன்று பட்டது போல், நானும் என்னுடைய மனதில் உன்னை மட்டுமே காண வேண்டும் என்ற விருப்பத்தை மனதில் நிறைத்து வைத்துள்ளேன். எனக்கு நீ உன் திருவடியைக் காட்டு. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! திருப்பெருந்துறையில் கோடி கொண்டிருக்கும் சிவ பெருமானே! உறக்கத்தில் இருந்து எழுவாயாக.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் முன்ஜாமீன் கோரி மனு

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நாளை ஆஜராக உத்தரவு

news

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் விலகல்

news

எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது : மு.க.ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்

news

சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

news

பெருமாளே போரொளியாக இணைத்துக் கொண்ட.. திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்)

news

ஜூலை மாதத்தில் என்னெல்லாம் வருது தெரியுமா.. மறக்க முடியாத ஆடி ஆன் தி வே!

news

"கோயில்களில் முறைகேடா? இனி நேரடியாக புகார் அளிக்கலாம்" – அமைச்சர் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்