- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 8 :
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

பொருள் :
உலகத்தை படைத்த முதல்வனும், அனைத்து உயிர்களுக்கும் நடுநாய்னான தலைவனாகவும், முடிவாகவும் இருப்பவனே! பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரை தவிர உன்னை வேறு யாரால் அறிய முடியும்? உன்னுடைய அடியாளர்கள் உன்னை அறிய வேண்டும் என முயற்சி செய்த போது நீ நெருப்பு பிளம்பாக காட்சி தந்தாய். ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரின் இல்லங்களிலும் எழுந்தருளி இருக்கும் தாராள குணமுடையவனே! கொழுந்து விட்டு எரியும் நெருப்பை போவ்ற திருமேனியாக ஜோதி வடிவமாக காட்சி தந்தவனே! திருப்பெருந்துறையிலும் கோவிலை என்னுடைய கண்ணில் காட்டினாய். அந்தணர் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். ஆரமுதானே பெருமானே! இந்த எளியேனுக்கு உன்னுடைய அருளை பரிபூரணமாக வழங்க துயில் எழ வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும்.. பள்ளிக்கூடம் போகலாமா.. A Journey Back to the Classroom!
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
அமைதியே மேலோங்கும்.. Peace Reigns Supreme!
கணிதத்தின் தலைமகன்!
தேசிய கணித தினமாச்சே இன்னிக்கு.. உங்களுக்கு ஓர் புதிர்.. விடையைச் சொல்லுங்க பார்ப்போம்!
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டின் அழகு!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
{{comments.comment}}