மார்கழி 28 திருப்பள்ளியெழுச்சி பாடல் 8 : முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்

Jan 11, 2025,04:46 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பள்ளியெழுச்சி பாடல் 8 :


முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்

மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்

பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்

பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!

செந்தழல் புரை திருமேனியும் காட்டித்

திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!




பொருள் : 


உலகத்தை படைத்த முதல்வனும், அனைத்து உயிர்களுக்கும் நடுநாய்னான தலைவனாகவும், முடிவாகவும் இருப்பவனே! பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரை தவிர உன்னை வேறு யாரால் அறிய முடியும்? உன்னுடைய அடியாளர்கள் உன்னை அறிய வேண்டும் என முயற்சி செய்த போது நீ நெருப்பு பிளம்பாக காட்சி தந்தாய். ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரின் இல்லங்களிலும் எழுந்தருளி இருக்கும் தாராள குணமுடையவனே! கொழுந்து விட்டு எரியும் நெருப்பை போவ்ற திருமேனியாக ஜோதி வடிவமாக காட்சி தந்தவனே! திருப்பெருந்துறையிலும் கோவிலை என்னுடைய கண்ணில் காட்டினாய். அந்தணர் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். ஆரமுதானே பெருமானே! இந்த எளியேனுக்கு உன்னுடைய அருளை பரிபூரணமாக வழங்க துயில் எழ வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Housewives எல்லாம் சும்மா இல்லைங்க.. அவர்கள் பாராட்டப்படாத உழைப்பாளிகள்!

news

பார் போற்றும் பாவேந்தர்..!

news

Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!

news

ஒரே வானம் ஒரே பூமி ஒரே வாழ்க்கை!

news

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்காளர்கள் கவனத்திற்கு...ஓட்டு போடுவது எப்படி?

news

திமுக, அதிமுக இரண்டுமே பாஜக.,வின் அடிமை...கடைசி நாள் பிரச்சாரத்தில் விளாசிய விஜய்

news

கடைசி நாள் பிரச்சாரம்...கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி

news

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்...இது இருந்தால் ஓட்டு போடலாம்

news

Agni natchatiram: அக்னி நட்சத்திரம் 2026 .. வெளுக்கெடுக்க ஆரம்பிக்கும் வெயில்.. சம்மர் டிப்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்