- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 8 :
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

பொருள் :
உலகத்தை படைத்த முதல்வனும், அனைத்து உயிர்களுக்கும் நடுநாய்னான தலைவனாகவும், முடிவாகவும் இருப்பவனே! பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரை தவிர உன்னை வேறு யாரால் அறிய முடியும்? உன்னுடைய அடியாளர்கள் உன்னை அறிய வேண்டும் என முயற்சி செய்த போது நீ நெருப்பு பிளம்பாக காட்சி தந்தாய். ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரின் இல்லங்களிலும் எழுந்தருளி இருக்கும் தாராள குணமுடையவனே! கொழுந்து விட்டு எரியும் நெருப்பை போவ்ற திருமேனியாக ஜோதி வடிவமாக காட்சி தந்தவனே! திருப்பெருந்துறையிலும் கோவிலை என்னுடைய கண்ணில் காட்டினாய். அந்தணர் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். ஆரமுதானே பெருமானே! இந்த எளியேனுக்கு உன்னுடைய அருளை பரிபூரணமாக வழங்க துயில் எழ வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கொந்தளித்த திருமாவளவன்.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல்!
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
"தலஜோ".. சாலமன் பாப்பையா ஐயாவின் மறக்க முடியாத வகுப்பறை நினைவுகள்!
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
Vinayagar Chathurthi Special: அழகான அலங்காரம்.. மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி?
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
{{comments.comment}}