- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 8 :
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

பொருள் :
உலகத்தை படைத்த முதல்வனும், அனைத்து உயிர்களுக்கும் நடுநாய்னான தலைவனாகவும், முடிவாகவும் இருப்பவனே! பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரை தவிர உன்னை வேறு யாரால் அறிய முடியும்? உன்னுடைய அடியாளர்கள் உன்னை அறிய வேண்டும் என முயற்சி செய்த போது நீ நெருப்பு பிளம்பாக காட்சி தந்தாய். ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரின் இல்லங்களிலும் எழுந்தருளி இருக்கும் தாராள குணமுடையவனே! கொழுந்து விட்டு எரியும் நெருப்பை போவ்ற திருமேனியாக ஜோதி வடிவமாக காட்சி தந்தவனே! திருப்பெருந்துறையிலும் கோவிலை என்னுடைய கண்ணில் காட்டினாய். அந்தணர் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். ஆரமுதானே பெருமானே! இந்த எளியேனுக்கு உன்னுடைய அருளை பரிபூரணமாக வழங்க துயில் எழ வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெண்களை அச்சுறுத்தும் ‘முடக்கு வாதம்’: அறிகுறிகளும், கண்டறியும் வழிகளும்!
“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?
புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு
தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
Sasikala Viswanathan Short story: விந்தை
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்
ஆடிக்கிருத்திகை.. வியாழன் மாலை முதல் வெள்ளி மாலை வரை.. முருகனை வழிபடலாம்
கிருத்திகை நாயகனே கீர்த்திகளை தருபவனே..!
{{comments.comment}}