திருவெம்பாவை பாசுரம் 06 :
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்
பொருள் :
மான் போன்று அழகாக துள்ளி ஓடும் பெண்ணே நாளை நான் வந்து உங்களை எழுப்புகிறேன் என்று நீ சொன்ன வார்த்தைகள் எங்கு போனதென்று தெரியவில்லை. எங்களிடம் சொன்னது கூட நினைவில்லாமல் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாரே. உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா? விண்ணில் உள்ளவர்களும், பூமியில் வசிப்பவர்களும், இன்னும் தெரியாத உயிரினங்களும் கூட நெருங்க முடியாத நம்முடைய இறைவன் சிவ பெருமான் நமக்காக தானே வந்து அருள் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார். அவரின் அருளை பெறுவதற்காக வானவர்கள் அவரை புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் அவரை போற்றி பாடிக் கொண்டிருக்கிறோம். வந்து உன்னுடைய கதவை திற. நீ கதவை திறக்கா விட்டாலும் பரவாயில்லை. நம்முடைய சிவனின் பெருமைகளை நாங்கள் பாடுவதை கேட்டு உள்ளமும், உடம்பும் உருகி விடுகிமே. உன் மனம் உருகாமலா இருக்கிறது என்கிறாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை எழுப்ப வந்த தோழி.
விளக்கம் :
இறைவனின் பெருமைகளை கேட்கும் போது கேட்பவரின் உள்ளம் பக்தியால் உருகி விட வேண்டும். இறைவன் நமக்காக அருள் செய்வதற்கு காத்திருக்கும் போது அவரை போற்றி பாடி, அவரின் அருளை பெறாமல் உலக ஆசைகளில், மாயைகளில் மனிதர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் அருளை பெறுவதற்காக காத்திருக்கும் போது நாம் இப்படி அறியாமை என்னும் தூக்கத்தில் சிக்கிக் கொண்டு இருப்பது சரிதானா என கூறுகிறார் மாணிக்கவாசகர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}