திருவெம்பாவை பாசுரம் 06 :
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்

பொருள் :
மான் போன்று அழகாக துள்ளி ஓடும் பெண்ணே நாளை நான் வந்து உங்களை எழுப்புகிறேன் என்று நீ சொன்ன வார்த்தைகள் எங்கு போனதென்று தெரியவில்லை. எங்களிடம் சொன்னது கூட நினைவில்லாமல் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாரே. உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா? விண்ணில் உள்ளவர்களும், பூமியில் வசிப்பவர்களும், இன்னும் தெரியாத உயிரினங்களும் கூட நெருங்க முடியாத நம்முடைய இறைவன் சிவ பெருமான் நமக்காக தானே வந்து அருள் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார். அவரின் அருளை பெறுவதற்காக வானவர்கள் அவரை புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் அவரை போற்றி பாடிக் கொண்டிருக்கிறோம். வந்து உன்னுடைய கதவை திற. நீ கதவை திறக்கா விட்டாலும் பரவாயில்லை. நம்முடைய சிவனின் பெருமைகளை நாங்கள் பாடுவதை கேட்டு உள்ளமும், உடம்பும் உருகி விடுகிமே. உன் மனம் உருகாமலா இருக்கிறது என்கிறாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை எழுப்ப வந்த தோழி.
விளக்கம் :
இறைவனின் பெருமைகளை கேட்கும் போது கேட்பவரின் உள்ளம் பக்தியால் உருகி விட வேண்டும். இறைவன் நமக்காக அருள் செய்வதற்கு காத்திருக்கும் போது அவரை போற்றி பாடி, அவரின் அருளை பெறாமல் உலக ஆசைகளில், மாயைகளில் மனிதர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் அருளை பெறுவதற்காக காத்திருக்கும் போது நாம் இப்படி அறியாமை என்னும் தூக்கத்தில் சிக்கிக் கொண்டு இருப்பது சரிதானா என கூறுகிறார் மாணிக்கவாசகர்.
மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
{{comments.comment}}