மார்கழி திருவெம்பாவை பாசுரம் 13 .. "பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்"

Dec 29, 2023,11:45 AM IST

திருவெம்பாவை பாசுரம் 13 :


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

சங்கம் சிலம்பப் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.


பொருள் :




கரும் நீல நிலத்தில் குவளை மலர்கள் குளத்தில் பூத்திருப்பது கருமையான கூந்தலையும், அழகிய கண்களையும் உடைய பார்வதி தேவியை போல் தெரிகிறது. அருகில் காணப்படும் சிவந்த தாமரை மலர்கள் சிவ பெருமானின் சிவந்த மேனியை போல் உள்ளன. இந்த குளத்தில் தங்களில் அழுக்குகளை கழுவுவதற்காக மக்கள் வருகிறார்கள்.


அந்த மக்கள் நமச்சிவாய என சொல்லி நீராடுவதால் இது சிவனும், சக்தியும் இணைந்த இடமாக உள்ளது. இதில் கை வளையல்கள் சத்தமிட, நம்முடைய ஆபரணங்கள் ஓசை எழுப்ப, நாமும் நீந்தி, குளித்து நீராடி, அந்த இறைவனின் புகழினை பாடி நீராடுவோம் வாருங்கள்.


விளக்கம் :


பார்க்கும் இடங்கள், அவற்றில் இருக்கும் பொருள்கள் அனைத்திலும் இறைவன் காட்சி தருகிறான். அனைத்து இடங்களிலும் தெய்வீக தன்மை நிறைந்திருக்கிறது. இதை உணர்ந்து பக்தி செய்ய துவங்க வேண்டும். அப்படி இறைவனோடு உணர்வில் கலந்து விட்டால் பேரின்பம் நமக்கு கிடைக்கும். இறைவனுடன் ஒன்றி இருக்கும் இன்பத்தை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என அழைக்கிறார் மாணிக்கவாசகர்.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்