திருவெம்பாவை பாசுரம் 16 :
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்

பொருள் :
கடலில் உள்ள நீர் அனைத்தையும் குடித்து, கருமை நிறமாக காட்சி தருகின்றன மேகங்கள். அவைகள் அன்னை பார்வதி தேவியின் கருமையான நிறத்தை நினைவுப்படுத்துகின்றன. அன்னையின் மெலிந்த இடையை போல் மின்னல் கீற்றுகள் வளைந்து, நெழிந்து ஓடுகின்றன. அம்பிகையின் திருவடியில் அணிந்திருக்கக் கூடிய சிலம்பு முழங்குவதைப் போல் இடி ஓசை முழங்குகிறது.
அன்னையின் அழகிய முகத்தில் உள்ள திருப்புருவங்கள் அசைந்து ஆடுவதைப் போல் வானவில்கள் அழகாக வளைந்துள்ளன. தன்னுடைய கணவன் சிவ பெருமானை பிரியக் கூடாது என்பதற்காக அவரின் உடலில் பாதியாக இருக்கக் கூடிய அன்னை, சிவ பெருமானுக்கு முன்பே வந்து நமக்கு அருள் செய்யக் கூடியவள். அழவில்லாமல் அவள் நமக்கு செய்யும் அருளை போல பெய்து இந்த உலகத்தை மகிழ்விப்பாய் மழையே.
விளக்கம் :
திருவெம்பாவையின் முதல் 15 பாடல்களிலும் சிவ பெருமானின் பெருமைகளையும், சிவ சின்னங்களின் தன்மைகளையும், சிவனடியார்களின் பக்தியை பற்றியும் கூறினார் மாணிக்கவாசகர். சிவனிடம் எப்படி பக்தி செய்ய வேண்டும், என்ன வேண்ட வேண்டும், அவர் நம்மை எப்படி எல்லாம் ஆட்கொண்டு, அளவில்லாத இன்பத்தை தருவார் என்றும் தோழிகள் இருவர் பேசிக் கொள்வதைப் போல் பாடி இருந்தார். ஆனால் தன்னுடைய 16வது பாடலில் சிவனின் ஒரு பாதியாக இருக்கும் பார்வதி தேவியின் அழகையும், அவள் தனது பக்தர்களுக்கு அருள் செய்யும் விதத்தையும் மழை மேகங்களுடன் ஒப்பிட்டு பாடி உள்ளார். பார்வதி தேவி, உலகிற்கே அன்னையாக விளங்கக் கூடியவள். தாயின் அன்பு, கருணை எப்படி இருக்கும் என்பதை மிக அழகாக இந்த பாடலில் எடுத்துரைத்துள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}