திருவெம்பாவை பாசுரம் 17 :
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இம்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

பொருள் :
தேனை சிந்தக் கூடிய அழகி மலர்களை கருமையான கூழ்தலில் சூடிய பெண்களே, சிவந்த தாமரை போன்ற கண்களை உடைய திருமாள், நான்கு திசைகளிலும் தலையை உடைய பிரம்மன், மற்ற தேவர்கள் என எவரும் வழங்காத இன்பத்தை அள்ளி தரக் கூடியவர் நம்முடைய தலைவாகிய சிவ பெருமான். அவர் நம் ஒவ்வொருவருடைய வீடுகளிலும் எழுந்தருளி உள்ளார். அவனுடைய சிவந்த தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளை பற்றும் அடியவர்களை, ஒரு அரசன் எவ்வாறு தன்னுடைய நாட்டில் உள்ள மக்களில் பாகுபாடு காட்டால் அனைவரையும் சமமாக நடத்தி, காப்பாற்றுவானோ அதே போல் அவரும் தம்முடைய அடியார்களுக்கு அமிர்தத்தை போன்ற இன்பத்தை வழங்குகிறார். அடியவர்களுக்கு அமிர்தத்தை போன்று விளங்கக் கூடிய நம்முடைய தலைவனாகிய சிவனை வணங்கி நலம் பெறுவதற்காக தாமரை மலர்கள் மிதக்கும் குளத்தில் களித்து நீராடி, அவனின் தரிசனத்தை பெற அனைவரும் வாருங்கள்.
விளக்கம் :
இறைவன் கோவிலில் மட்டும் தான் இருக்கிறார் என எண்ணி விட வேண்டாம். அவன் நம்முடைய அனைவரின் வீடுகளிலும், மனங்களிலும் குடியிருக்கக் கூடியவன். இறைவன் அருளை வழங்குவதற்கு எவரிடமும் பாகுபாடு காட்டாதவன். இறைவனின் முன் அனைவரும் சரிசமம். தேவர்களுக்கு ஒரு மாதிரியும், தன்னுடைய பக்தர்களுக்கு ஒரு மாதிரியும், தன்னை நினைக்காதவர்களுக்கு ஒரு மாதிரியும் இறைவன் அருள் செய்வது கிடையாது. மனதார நினைத்து, இருந்த இடத்தில் இருந்து வணங்கினாலே இறைவன் ஓடி வந்து அருள் செய்வான் என்பதை இந்த பாடலில் மாணிக்க வாசகர் விளக்கி உள்ளார்.
மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
{{comments.comment}}