திருவெம்பாவை பாசுரம் 17 :
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இம்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

பொருள் :
தேனை சிந்தக் கூடிய அழகி மலர்களை கருமையான கூழ்தலில் சூடிய பெண்களே, சிவந்த தாமரை போன்ற கண்களை உடைய திருமாள், நான்கு திசைகளிலும் தலையை உடைய பிரம்மன், மற்ற தேவர்கள் என எவரும் வழங்காத இன்பத்தை அள்ளி தரக் கூடியவர் நம்முடைய தலைவாகிய சிவ பெருமான். அவர் நம் ஒவ்வொருவருடைய வீடுகளிலும் எழுந்தருளி உள்ளார். அவனுடைய சிவந்த தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளை பற்றும் அடியவர்களை, ஒரு அரசன் எவ்வாறு தன்னுடைய நாட்டில் உள்ள மக்களில் பாகுபாடு காட்டால் அனைவரையும் சமமாக நடத்தி, காப்பாற்றுவானோ அதே போல் அவரும் தம்முடைய அடியார்களுக்கு அமிர்தத்தை போன்ற இன்பத்தை வழங்குகிறார். அடியவர்களுக்கு அமிர்தத்தை போன்று விளங்கக் கூடிய நம்முடைய தலைவனாகிய சிவனை வணங்கி நலம் பெறுவதற்காக தாமரை மலர்கள் மிதக்கும் குளத்தில் களித்து நீராடி, அவனின் தரிசனத்தை பெற அனைவரும் வாருங்கள்.
விளக்கம் :
இறைவன் கோவிலில் மட்டும் தான் இருக்கிறார் என எண்ணி விட வேண்டாம். அவன் நம்முடைய அனைவரின் வீடுகளிலும், மனங்களிலும் குடியிருக்கக் கூடியவன். இறைவன் அருளை வழங்குவதற்கு எவரிடமும் பாகுபாடு காட்டாதவன். இறைவனின் முன் அனைவரும் சரிசமம். தேவர்களுக்கு ஒரு மாதிரியும், தன்னுடைய பக்தர்களுக்கு ஒரு மாதிரியும், தன்னை நினைக்காதவர்களுக்கு ஒரு மாதிரியும் இறைவன் அருள் செய்வது கிடையாது. மனதார நினைத்து, இருந்த இடத்தில் இருந்து வணங்கினாலே இறைவன் ஓடி வந்து அருள் செய்வான் என்பதை இந்த பாடலில் மாணிக்க வாசகர் விளக்கி உள்ளார்.
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!
{{comments.comment}}