மார்கழி திருவெம்பாவை பாசுரம் 17 : செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

Jan 02, 2024,08:42 AM IST

திருவெம்பாவை பாசுரம் 17 :


செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாததோர் இம்பம்நம் பாலதாக்

கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி

இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.




பொருள் :


தேனை சிந்தக் கூடிய அழகி மலர்களை கருமையான கூழ்தலில் சூடிய பெண்களே, சிவந்த தாமரை போன்ற கண்களை உடைய திருமாள், நான்கு திசைகளிலும் தலையை உடைய பிரம்மன், மற்ற தேவர்கள் என எவரும் வழங்காத இன்பத்தை அள்ளி தரக் கூடியவர் நம்முடைய தலைவாகிய சிவ பெருமான். அவர் நம் ஒவ்வொருவருடைய வீடுகளிலும் எழுந்தருளி உள்ளார். அவனுடைய சிவந்த தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளை பற்றும் அடியவர்களை, ஒரு அரசன் எவ்வாறு தன்னுடைய நாட்டில் உள்ள மக்களில் பாகுபாடு காட்டால் அனைவரையும் சமமாக நடத்தி, காப்பாற்றுவானோ அதே போல் அவரும் தம்முடைய அடியார்களுக்கு அமிர்தத்தை போன்ற இன்பத்தை வழங்குகிறார். அடியவர்களுக்கு அமிர்தத்தை போன்று விளங்கக் கூடிய நம்முடைய தலைவனாகிய சிவனை வணங்கி நலம் பெறுவதற்காக தாமரை மலர்கள் மிதக்கும் குளத்தில் களித்து நீராடி, அவனின் தரிசனத்தை பெற அனைவரும் வாருங்கள்.


விளக்கம் :


இறைவன் கோவிலில் மட்டும் தான் இருக்கிறார் என எண்ணி விட வேண்டாம். அவன் நம்முடைய அனைவரின் வீடுகளிலும், மனங்களிலும் குடியிருக்கக் கூடியவன். இறைவன் அருளை வழங்குவதற்கு எவரிடமும் பாகுபாடு காட்டாதவன். இறைவனின் முன் அனைவரும் சரிசமம். தேவர்களுக்கு ஒரு மாதிரியும், தன்னுடைய பக்தர்களுக்கு ஒரு மாதிரியும், தன்னை நினைக்காதவர்களுக்கு ஒரு மாதிரியும் இறைவன் அருள் செய்வது கிடையாது. மனதார நினைத்து, இருந்த இடத்தில் இருந்து வணங்கினாலே இறைவன் ஓடி வந்து அருள் செய்வான் என்பதை இந்த பாடலில் மாணிக்க வாசகர் விளக்கி உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்