மார்கழி திருவெம்பாவை பாசுரம் 18 : அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்

Jan 03, 2024,08:39 AM IST

திருவெம்பாவை பாசுரம் 18 :


அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல்

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்

தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் 

பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.




பொருள் :


வானில் உள்ள தேவர்கள் முதல் அனைவரும் அண்ணாமலையானின் திருவடிகளை அடைவதற்குபணிந்து வணங்குகிறார்கள். அவ்வாறு அவர்கள் வணங்கும் போது அவர்களில் தலைகளில் வைத்திருக்கும் பல விதமான விலை உயர்ந்த மணிகளின் நிகழ்கள் சிவ பெருமானின் பதங்களில் படுகின்றன. சூரியன் வந்தது எப்படி இரவின் இருள் மறைந்து விடுகிறதோ, அதே போல் சிவ பெருமானின் ஒளி பொருந்திய பாதங்களுக்கு முன், தேவர்களின் மகுடங்களில் இருக்கும் விலை உயர்ந்த கற்கள் பிரகாசிப்பது காணாமல் போய் விடுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைத்து உயிர்களுக்கும் சிவ பெருமானே நீக்கமற நிறைந்திருக்கிறார். வானம், பூமி, மண், மரம், வேர் என அனைத்து உயிர்களும் சிவனே நிறைந்திருக்கிறார். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த அமுதம் போன்று அருளை தரும் ஈசனின் பாதங்களை பணிந்து, புகழ்ந்து பாடிட வேண்டும். அதற்காக இந்த குளத்தில் நிரம்பி இருக்கும் நீரால் பாய்ந்து குளிக்கலாம் வாருங்கள்.


விளக்கம் : 


ஆண், பெண், மரம், செடி ,கொடி என அனைத்து உயிர்களுக்குள்ளும், அனைத்து பொருட்களிலும் இறைனே நிறைந்திருக்கிறான். உண்மையான பக்தியுடன் இறைவனின் பாதங்களை பணியும் போது, நாம் எவ்வளவு உயர்வானவர்கள் என நினைத்துக் கொண்டிருந்தாலும் அந்த ஆணவம் அழிந்து விடும் இறைவனின் திருவடிகளை பணிந்ததும் காணாமல் போய் விடும். நமக்குள் நிறைந்திருக்கும் இறைவனே நம்மை எப்போதும் காக்கக் கூடியவன் என சிவ பெருமானின் பெருமை எடுத்து கூறுகிறார் மாணிக்கவாசகர். திருவெம்பாவை பாடப்பட்ட தலம் திருவண்ணாமலை என்பதால் அதன் பெருமையையும், பார்வதி தேவிக்கு தனது உடலில் பாதியை தந்து, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்ததும் திருவண்ணாமலையில் தான். இந்த சம்பவங்களை குறிக்கும் விதமாகவும் இந்த பாடலை அமைத்துள்ளார் மாணிக்கவாசகர்.

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்