மார்கழி திருவெம்பாவை பாசுரம் 18 : அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்

Jan 03, 2024,08:39 AM IST

திருவெம்பாவை பாசுரம் 18 :


அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல்

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்

தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் 

பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.




பொருள் :


வானில் உள்ள தேவர்கள் முதல் அனைவரும் அண்ணாமலையானின் திருவடிகளை அடைவதற்குபணிந்து வணங்குகிறார்கள். அவ்வாறு அவர்கள் வணங்கும் போது அவர்களில் தலைகளில் வைத்திருக்கும் பல விதமான விலை உயர்ந்த மணிகளின் நிகழ்கள் சிவ பெருமானின் பதங்களில் படுகின்றன. சூரியன் வந்தது எப்படி இரவின் இருள் மறைந்து விடுகிறதோ, அதே போல் சிவ பெருமானின் ஒளி பொருந்திய பாதங்களுக்கு முன், தேவர்களின் மகுடங்களில் இருக்கும் விலை உயர்ந்த கற்கள் பிரகாசிப்பது காணாமல் போய் விடுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைத்து உயிர்களுக்கும் சிவ பெருமானே நீக்கமற நிறைந்திருக்கிறார். வானம், பூமி, மண், மரம், வேர் என அனைத்து உயிர்களும் சிவனே நிறைந்திருக்கிறார். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த அமுதம் போன்று அருளை தரும் ஈசனின் பாதங்களை பணிந்து, புகழ்ந்து பாடிட வேண்டும். அதற்காக இந்த குளத்தில் நிரம்பி இருக்கும் நீரால் பாய்ந்து குளிக்கலாம் வாருங்கள்.


விளக்கம் : 


ஆண், பெண், மரம், செடி ,கொடி என அனைத்து உயிர்களுக்குள்ளும், அனைத்து பொருட்களிலும் இறைனே நிறைந்திருக்கிறான். உண்மையான பக்தியுடன் இறைவனின் பாதங்களை பணியும் போது, நாம் எவ்வளவு உயர்வானவர்கள் என நினைத்துக் கொண்டிருந்தாலும் அந்த ஆணவம் அழிந்து விடும் இறைவனின் திருவடிகளை பணிந்ததும் காணாமல் போய் விடும். நமக்குள் நிறைந்திருக்கும் இறைவனே நம்மை எப்போதும் காக்கக் கூடியவன் என சிவ பெருமானின் பெருமை எடுத்து கூறுகிறார் மாணிக்கவாசகர். திருவெம்பாவை பாடப்பட்ட தலம் திருவண்ணாமலை என்பதால் அதன் பெருமையையும், பார்வதி தேவிக்கு தனது உடலில் பாதியை தந்து, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்ததும் திருவண்ணாமலையில் தான். இந்த சம்பவங்களை குறிக்கும் விதமாகவும் இந்த பாடலை அமைத்துள்ளார் மாணிக்கவாசகர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்