- மஞ்சுளா தேவி
ராஞ்சி: ஒடிஷா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் நேற்று முதல் ஒரு தீவிரமான வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் தோண்டத் தோண்ட நோட்டுக்கட்டுக்களாக வருவதால் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை ரூ. 290 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடந்த மிகப் பெரிய வருமான வரி சோதனையாக இது பார்க்கப்படுகிறது. ஒரே சோதனையில் இந்த அளவுக்கு மிகப் பெரிய அளவில் பணக் கட்டுக்கள் சிக்கியிருப்பது இதுவே முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது.
ஒடிஷாவைச் சேர்ந்த மதுபான நிறுவனம் பெளத் சாஹு இன்பிரா. நாட்டின் மிகப் பெரிய மது பான ஆலைகளில் இதுவும் ஒன்று. இந்த நிறுவனம் மிகப் பெரிய அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிரடி சோதனையில் இறங்கியது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான, தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் இருப்பிடங்களில் சோதனைகள் நேற்று தொடங்கின.
3 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. இன்றும் ரெய்டுகள் தொடர்கின்றன. இதில் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது எது என்றால், தோண்டத் தோண்ட குவிந்து கிடக்கும் பணக் கட்டுக்கள்தான். அந்த அளவுக்கு தனியாக அறைகள் கட்டி அதில் பீரோ பீரோவாக பணத்தை அடுக்கி வைத்துள்ளனர். எல்லாமே 500 ரூபாய் நோட்டுக்களாக இருக்கிறது.
இங்கு கிடைத்துள்ள பணம் எல்லாமே கணக்கில் காட்டப்படாத பணம் என்று கூறப்படுகிறது. இவற்றை எண்ணுவதற்காக 35க்கும் மேற்பட்ட நோட்டு கட்டுக்களை எண்ணும் மெஷின்களை பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை ரூ. 290 கோடி அளவுக்கு பணம் எண்ணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பணம் எண்ண வேண்டியுள்ளதாம். மொத்தம் 176 பண பைகள் சிக்கியுள்ளன. இதில் 46 பைகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளது. மொத்தமும் எண்ணி முடித்தால் மலைக்க வைக்கும் அளவிலான பணமாக அது இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏழு அறைகள் மற்றும் ஒன்பது லாக்கர்களில் இன்னும் சோதனை நடத்தப்பட உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பௌத் டிஸ்டில்லரி குழும நிறுவனமான பல்தேவ் சாஹு இன்ஃப்ரா மற்றும் டிஸ்டில்லரிக்கு சொந்தமான அரிசி அலுவலகங்களில் இன்று சோதனை நடத்தப்படுகின்றன.
இந்த நிறுவனத்துடன் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் குமார் சாஹவுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. அவரது இருப்பிடத்திலிருந்தும் ஏராளமான பைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பணப் பறிமுதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். அவர் போட்டுள்ள ட்வீட்டில், இந்தப் பணக்கட்டுக்களை நாட்டு மக்கள் பார்க்க வேண்டும். நமது தலைவர்கள் சிலர் பேசி வரும் யோக்கியமான பேச்சுக்களையும் கேட்க வேண்டும். மக்களிடமிருந்து எதெல்லாம் சூறையாடப்பட்டதோ அவையெல்லாம் மீண்டும் மக்களுக்கே வந்து சேரும். இது மோடியின் உறுதிமொழி என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}