பெரும் துயரில் வயநாடு.. உருக்குலைந்து போன கிராமங்கள்.. இதுவரை 47 பேர் பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்

Jul 30, 2024,11:56 AM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவு சம்பவம் தேசிய துயராக மாறியுள்ளது. இதுவரை 47 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நூற்றுக்கணக்கானோர் இன்னும் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த பெரு மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் மேப்பாடி என்ற இடத்திற்கு அருகே மலைப் பகுதியில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.  இதில் நூற்றுக்கணக்கான மக்களும், வீடுகளும், கட்டடங்களும், வாகனங்களும் சிக்கிக் கொண்டனர்.




இதுவரை 47 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு  தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர், நிவாரணப் பணியாளர்கள் விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்து வருகின்றன. காவல்துறையினர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தீவிரமாக இறங்கியுள்ளனர். ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.


மீட்கப்படுவோர் உடனுக்குடன் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இவரகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி பல கிராமங்கள் உருக்குலைந்து போயுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டிருப்பதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் கூறுகிறார்கள்.


பிரதமர் மோடி இரங்கல்:




அனைத்து அரசுத் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.  அமைச்சர்கள் பலரும் சம்பவப் பகுதியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். வயநாடு நிலச்சரிவு குறித்த தகவல்கள் அறிய  9656938689 -  8086010833 ஆகிய உதவி எண்களை மாநில அரசு அறிவித்துள்ளது.


வயநாடு நிலச்சரிவு குறித்து பிரதமர் நரேந்திர  மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்பு கொண்டு அவர் பேசியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு முழுமையாக உதவும் என்றும் அவர் அறிவித்தார். அத்தோடு பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீட்டையும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்