பெரும் துயரில் வயநாடு.. உருக்குலைந்து போன கிராமங்கள்.. இதுவரை 47 பேர் பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்

Jul 30, 2024,11:56 AM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவு சம்பவம் தேசிய துயராக மாறியுள்ளது. இதுவரை 47 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நூற்றுக்கணக்கானோர் இன்னும் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த பெரு மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் மேப்பாடி என்ற இடத்திற்கு அருகே மலைப் பகுதியில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.  இதில் நூற்றுக்கணக்கான மக்களும், வீடுகளும், கட்டடங்களும், வாகனங்களும் சிக்கிக் கொண்டனர்.




இதுவரை 47 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு  தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர், நிவாரணப் பணியாளர்கள் விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்து வருகின்றன. காவல்துறையினர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தீவிரமாக இறங்கியுள்ளனர். ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.


மீட்கப்படுவோர் உடனுக்குடன் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இவரகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி பல கிராமங்கள் உருக்குலைந்து போயுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டிருப்பதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் கூறுகிறார்கள்.


பிரதமர் மோடி இரங்கல்:




அனைத்து அரசுத் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.  அமைச்சர்கள் பலரும் சம்பவப் பகுதியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். வயநாடு நிலச்சரிவு குறித்த தகவல்கள் அறிய  9656938689 -  8086010833 ஆகிய உதவி எண்களை மாநில அரசு அறிவித்துள்ளது.


வயநாடு நிலச்சரிவு குறித்து பிரதமர் நரேந்திர  மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்பு கொண்டு அவர் பேசியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு முழுமையாக உதவும் என்றும் அவர் அறிவித்தார். அத்தோடு பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீட்டையும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்