பெரும் துயரில் வயநாடு.. உருக்குலைந்து போன கிராமங்கள்.. இதுவரை 47 பேர் பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்

Jul 30, 2024,11:56 AM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவு சம்பவம் தேசிய துயராக மாறியுள்ளது. இதுவரை 47 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நூற்றுக்கணக்கானோர் இன்னும் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த பெரு மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் மேப்பாடி என்ற இடத்திற்கு அருகே மலைப் பகுதியில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.  இதில் நூற்றுக்கணக்கான மக்களும், வீடுகளும், கட்டடங்களும், வாகனங்களும் சிக்கிக் கொண்டனர்.




இதுவரை 47 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு  தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர், நிவாரணப் பணியாளர்கள் விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்து வருகின்றன. காவல்துறையினர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தீவிரமாக இறங்கியுள்ளனர். ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.


மீட்கப்படுவோர் உடனுக்குடன் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இவரகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி பல கிராமங்கள் உருக்குலைந்து போயுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டிருப்பதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் கூறுகிறார்கள்.


பிரதமர் மோடி இரங்கல்:




அனைத்து அரசுத் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.  அமைச்சர்கள் பலரும் சம்பவப் பகுதியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். வயநாடு நிலச்சரிவு குறித்த தகவல்கள் அறிய  9656938689 -  8086010833 ஆகிய உதவி எண்களை மாநில அரசு அறிவித்துள்ளது.


வயநாடு நிலச்சரிவு குறித்து பிரதமர் நரேந்திர  மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்பு கொண்டு அவர் பேசியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு முழுமையாக உதவும் என்றும் அவர் அறிவித்தார். அத்தோடு பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீட்டையும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்