"ஒவ்வொரு திருமணமும் சிறப்பானது".. கிரிஸில்டாவின் புகாருக்கு.. மாதம்பட்டி ரங்கராஜ் தந்த மறைமுக பதில்

Sep 03, 2025,11:27 AM IST

சென்னை: சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து கொண்டு, இப்போது தான் கர்ப்பமாகியுள்ள நிலையில் கைவிட்டு விட்டதாக போலீஸில் அவரது 2வது மனைவி ஜாய் கிரிஸில்டா புகார் கொடுத்துள்ள நிலையில், அந்தப் புகாருக்கு மறைமுகமாக பதில் கொடுத்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.


பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஃபேஷன் டிசைனர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கிய பிறகு ஏற்றுக்கொள்ள மறுப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் எந்த பதிலும் அளிக்கவில்லை. 


இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். அது கிறிஸில்டாவுக்கு அவர் அளித்துள் மறைமுகமான பதிலாக பார்க்கப்படுகிறது. நடிகர் பிரேம் குமாரின் மகன் திருமணத்தில் உணவு பரிமாறிய அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். இந்த விஷயம்தான் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.




மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள அந்தப் பதிவில், ஒவ்வொரு திருமணமும் சிறப்பானது. ஆனால் சில திருமணங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். நடிகர் பிரேம் அண்ணாவின் மகன் கௌஷிக் சுந்தரம் மற்றும் பூஜிதா கல்யாணராமன் திருமணத்தில் பங்கேற்றது பெருமை. மாதம்பட்டி கேட்டரிங் உணவு மட்டுமல்ல, அன்பையும், ஆசீர்வாதத்தையும் வழங்குகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார். பதிவில் கமெண்ட் செய்யும் வசதியை அவர் முடக்கி வைத்துள்ளார்.


மறுபக்கம் ஜாய் கிரிஸில்டா ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ் ஒருவரிடம் பேசுவது போல உள்ளது. அந்த 41 வினாடி வீடியோவில், மாதம்பட்டி ரங்கராஜ், "ஹே, என்ன விஷயம்... பொண்டாட்டி? மிஸ் யூ, லவ் யூ. நான் வீட்டுக்கு போனேன், சாப்பிட்டேன், குளிச்சேன், டிரஸ் மாத்தினேன், திரும்பி வந்துட்டேன். இன்டர்வியூ முடிஞ்சது. எனக்கு 4 மணிக்கு மீட்டிங் இருக்கு, 3.30க்கு கிளம்பிடுவேன். காபி குடிச்சேன்" என்று கூறுகிறார். பிறகு கேமராவை முத்தமிட்டு "டாட்டா" என்று சொல்லி வீடியோவை முடிக்கிறார்.


மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜாய் கிரிஸில்டா விவகாரம் பரபரப்பைக் கூட்டியுள்ளது. அதற்கு முன்னதாக கிறிஸில்டாவுடன் ரங்கராஜ் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதன் பின்னர்தான் இந்த விவகாரம் வெடித்தது நினைவிருக்கலாம்.


இப்படித்தான் சமீபத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 2வது திருமண விவகாரம் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர் அந்த திருமணத்தை கிட்டத்தட்ட 50 வருட காலம் "பாதுகாப்பாக" வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP S Janaki: நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்.. பாட்டுக்குயில் ஜானகி அம்மா!

news

மறைந்தார் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி.. 3 தலைமுறையாக ரசிகர்களை மகிழ வைத்த வானம்பாடி!

news

Vietnam boat tragedy: வியட்நாட் துயரத்தில் 10 தமிழர்கள் பலி.. முதல்வர் சி. ஜோசப் விஜய் வேதனை

news

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!

news

அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு

news

வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்

news

Jananayagan release update விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்...போஸ்டருடன் வந்த புதிய அப்டேட்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 2026 நாளை துவக்கம்

news

இந்தியாவில் OTT தளங்களுக்கும் சென்சார் சான்று: மத்திய அரசு திட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்