"ஒவ்வொரு திருமணமும் சிறப்பானது".. கிரிஸில்டாவின் புகாருக்கு.. மாதம்பட்டி ரங்கராஜ் தந்த மறைமுக பதில்

Sep 03, 2025,11:27 AM IST

சென்னை: சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து கொண்டு, இப்போது தான் கர்ப்பமாகியுள்ள நிலையில் கைவிட்டு விட்டதாக போலீஸில் அவரது 2வது மனைவி ஜாய் கிரிஸில்டா புகார் கொடுத்துள்ள நிலையில், அந்தப் புகாருக்கு மறைமுகமாக பதில் கொடுத்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.


பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஃபேஷன் டிசைனர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கிய பிறகு ஏற்றுக்கொள்ள மறுப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் எந்த பதிலும் அளிக்கவில்லை. 


இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். அது கிறிஸில்டாவுக்கு அவர் அளித்துள் மறைமுகமான பதிலாக பார்க்கப்படுகிறது. நடிகர் பிரேம் குமாரின் மகன் திருமணத்தில் உணவு பரிமாறிய அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். இந்த விஷயம்தான் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.




மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள அந்தப் பதிவில், ஒவ்வொரு திருமணமும் சிறப்பானது. ஆனால் சில திருமணங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். நடிகர் பிரேம் அண்ணாவின் மகன் கௌஷிக் சுந்தரம் மற்றும் பூஜிதா கல்யாணராமன் திருமணத்தில் பங்கேற்றது பெருமை. மாதம்பட்டி கேட்டரிங் உணவு மட்டுமல்ல, அன்பையும், ஆசீர்வாதத்தையும் வழங்குகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார். பதிவில் கமெண்ட் செய்யும் வசதியை அவர் முடக்கி வைத்துள்ளார்.


மறுபக்கம் ஜாய் கிரிஸில்டா ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ் ஒருவரிடம் பேசுவது போல உள்ளது. அந்த 41 வினாடி வீடியோவில், மாதம்பட்டி ரங்கராஜ், "ஹே, என்ன விஷயம்... பொண்டாட்டி? மிஸ் யூ, லவ் யூ. நான் வீட்டுக்கு போனேன், சாப்பிட்டேன், குளிச்சேன், டிரஸ் மாத்தினேன், திரும்பி வந்துட்டேன். இன்டர்வியூ முடிஞ்சது. எனக்கு 4 மணிக்கு மீட்டிங் இருக்கு, 3.30க்கு கிளம்பிடுவேன். காபி குடிச்சேன்" என்று கூறுகிறார். பிறகு கேமராவை முத்தமிட்டு "டாட்டா" என்று சொல்லி வீடியோவை முடிக்கிறார்.


மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜாய் கிரிஸில்டா விவகாரம் பரபரப்பைக் கூட்டியுள்ளது. அதற்கு முன்னதாக கிறிஸில்டாவுடன் ரங்கராஜ் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதன் பின்னர்தான் இந்த விவகாரம் வெடித்தது நினைவிருக்கலாம்.


இப்படித்தான் சமீபத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 2வது திருமண விவகாரம் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர் அந்த திருமணத்தை கிட்டத்தட்ட 50 வருட காலம் "பாதுகாப்பாக" வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்