பாலமேடு ஜல்லிக்கட்டு.. துள்ளி வந்த காளைகள்.. பாய்ந்து அடக்கும் காளையர்கள்.. கோலாகலம்!

Jan 16, 2024,09:14 AM IST
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் இன்று நடந்து வரும் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. முதலில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இன்று பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட  கலெக்டர் சங்கீதா ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர். 1000க்கும் மேற்பட்ட காளைகளும், 700க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.




சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் பரிசு வழங்குகிறார். அதேபோல அதிக காளைகளைப் பிடிக்கும் சிறந்த மாடு பிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார் பரிசு வழங்குகிறார். பலத்த பாதுகாப்புடன் போட்டி நடந்து வருகிறது.

ஒவ்வொரு காளையைப் பிடிக்கும் வீரருக்கும் சைக்கிள், பீரோ, சேர், தங்கக் காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அதேபோல பிடிபடாத மாடுகளுக்கும் பரிசு அளிக்கப்படுகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் போலவே இன்றைய ஜல்லிக்கட்டும் கோலாகலமாக பட்டையைக் கிளப்பும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் போட்டியைக் கண்டு களித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ADMK candidates: 23 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடியில் மீண்டும் பழனிச்சாமி போட்டி!

news

அதிமுக 169 இடங்களில் போட்டி...கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 65 தொகுதிகள் விபரம்

news

கோவை வடக்கு அண்ணாமலையா.. கோவை தெற்கிலிருந்து திருப்பூருக்கு மாறுகிறாரா வானதி?

news

தளி முதல் ராசிபுரம் தனி வரை.. பாஜக போட்டியிடப் போகும் தொகுதிகள் இவைதான்.. Full list

news

TN Elections: 2021 சட்டசபைத் தேர்தலில் யார் யார் எத்தனை இடங்களில் போட்டி.. 2026ல் என்ன நிலைமை?

news

தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு கமல்ஹாசன் தள்ளப்பட்டுள்ளார்.. திருமாவளவன்

news

ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்வோருக்கு முக்கிய அறிவுறுத்தல்

news

தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியில்லை...வேல்முருகன் அதிரடி அறிவிப்பு

news

பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோவில் திருக்குடமுழக்கு விழா

அதிகம் பார்க்கும் செய்திகள்