பாலமேடு ஜல்லிக்கட்டு.. துள்ளி வந்த காளைகள்.. பாய்ந்து அடக்கும் காளையர்கள்.. கோலாகலம்!

Jan 16, 2024,09:14 AM IST
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் இன்று நடந்து வரும் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. முதலில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இன்று பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட  கலெக்டர் சங்கீதா ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர். 1000க்கும் மேற்பட்ட காளைகளும், 700க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.




சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் பரிசு வழங்குகிறார். அதேபோல அதிக காளைகளைப் பிடிக்கும் சிறந்த மாடு பிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார் பரிசு வழங்குகிறார். பலத்த பாதுகாப்புடன் போட்டி நடந்து வருகிறது.

ஒவ்வொரு காளையைப் பிடிக்கும் வீரருக்கும் சைக்கிள், பீரோ, சேர், தங்கக் காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அதேபோல பிடிபடாத மாடுகளுக்கும் பரிசு அளிக்கப்படுகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் போலவே இன்றைய ஜல்லிக்கட்டும் கோலாகலமாக பட்டையைக் கிளப்பும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் போட்டியைக் கண்டு களித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?

news

Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

news

இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

news

தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

news

93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!

அதிகம் பார்க்கும் செய்திகள்