பாலமேடு ஜல்லிக்கட்டு.. துள்ளி வந்த காளைகள்.. பாய்ந்து அடக்கும் காளையர்கள்.. கோலாகலம்!

Jan 16, 2024,09:14 AM IST
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் இன்று நடந்து வரும் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. முதலில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இன்று பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட  கலெக்டர் சங்கீதா ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர். 1000க்கும் மேற்பட்ட காளைகளும், 700க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.




சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் பரிசு வழங்குகிறார். அதேபோல அதிக காளைகளைப் பிடிக்கும் சிறந்த மாடு பிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார் பரிசு வழங்குகிறார். பலத்த பாதுகாப்புடன் போட்டி நடந்து வருகிறது.

ஒவ்வொரு காளையைப் பிடிக்கும் வீரருக்கும் சைக்கிள், பீரோ, சேர், தங்கக் காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அதேபோல பிடிபடாத மாடுகளுக்கும் பரிசு அளிக்கப்படுகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் போலவே இன்றைய ஜல்லிக்கட்டும் கோலாகலமாக பட்டையைக் கிளப்பும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் போட்டியைக் கண்டு களித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்