பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக.. தம்பி மகன் ஆகாஷ் ஆனந்த்தை நியமித்தார் மாயாவதி!

Dec 10, 2023,05:48 PM IST

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக தனது தம்பி மகன் ஆகாஷ் ஆனந்த்தை அறிவித்துள்ளார் கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வருமான மாயாவதி.


ஒரு காலத்தில் மாயாவதி தேசிய அளவில் மிகப் பிரபலமாக திகழ்ந்த தலித் தலைவர். தேசிய அளவிலான முக்கியத் தலைவர்களில், தவிர்க்க முடியாத  தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மாயாவதி. சக்தி வாய்ந்த தலைவராக இருந்து வந்த மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக, உத்தரப் பிரதேசம் மட்டுமல்லாமல் ஹிந்தி பெல்ட் மாநிலங்களிலும் செல்வாக்குடன் திகழ்ந்தவர்.


ஆனால் காலத்தின் கோலமாய் இன்று நலிவடைந்த நிலையில் அவரும் இருக்கிறார், அவரது கட்சியும் இருக்கிறது. உத்தரப் பிரதேச அரசியலில் அசைக்க முடியாத சக்தியாய் திகழ்ந்து வந்த பகுஜன் சமாஜ் கட்சி இன்று பெரிய அளவில் சோபிக்க முடியாம் முடங்கிப் போயிருக்கிறது. மாயாவதியைச் சுற்றி வட்டமிட்டு நிற்கும் பல்வேறு வழக்குகளும் கூட இதற்குக் காரணம். இதனால்தான் அவர் யாருடனும் சேரவும் முடியாமல், கூட்டணியும் வைக்க முடியாமல், தேர்தல்களில் வெல்லவும் முடியாமல் முடங்கக் காரணம்.




இந்த நிலையில் தனது அரசியல் வாரிசாக தனது தம்பி ஆனந்த்குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த்தை அறிவித்து அவரை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக அறிவித்துள்ளார் மாயாவதி. இதற்கு முன்பு ஆகாஷ் ஆனந்த் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். 2017ம் ஆண்டு முதல் கட்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறார் ஆகாஷ் ஆனந்த். அவரை திட்டமிட்டு வளர்த்து வந்தார் மாயாவதி.


இந்த நிலையில் நலிவடைந்த நிலையில் உள்ள கட்சியை வளர்க்கவும், இளைஞர்களின் வாக்குகளைக் கவரும் வகையிலும் கட்சியை ஆகாஷ் ஆனந்த் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மாயாவதி தொடங்கியுள்ளார். இன்று லக்னோவில் நடந்த கட்சி கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதேசமயம், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலப் பொறுப்புகளை மட்டும் தானே பார்த்துக் கொள்வதாக மாயாவதி அறிவித்துள்ளார். இந்த இரு மாநிலங்களைத் தவிர்த்து நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக ஆகாஷ் ஆனந்த் செயல்படுவார்.


ஆகாஷ் ஆனந்த் எம்.பி.ஏ. படித்துள்ளார்.  28 வயதுதான் ஆகிறது.  இவரது தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி எந்த அளவுக்கு உயிர்த்தெழப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்