சென்னை: 2024 -25 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். பல்வேறு அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை அறிவித்து பட்ஜெட்டை வாசித்து வருகிறார் மேயர் பிரியா.
நடபாண்டில் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம் (19.2.24)சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். 2024- 25 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணில் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது

இந்த நிலையில் இன்று சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். சென்னை மாநகர மேயர் ஆர் பிரியா ராஜன். இவர் மேயராகப் பதவியேற்ற குறுகிய காலகட்டத்தில் 2022 -2023ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் இந்த பட்ஜெட்டில் மக்களைத் தேடி மேயர் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் ரிப்பன் மாளிகை கூடரங்கில் இன்று காலை 10 மணி அளவில் தாக்கல் செய்தார். இதில் பள்ளி கல்வித்துறை, விளையாட்டுத்துறை, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.பிப்ரவரி 22ஆம் தேதி இந்த பட்ஜெட்டுக்கான விவாதம் நடைபெற உள்ளது.
சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!
Dr Latha Poems: நம்பிக்கை என்னும் சிறகு முளைத்தால்.. நலிவு எல்லாம் நொடியில் மறையும்!
நெருங்கி வரும் பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க இன்னும் சிக்கல் தீரல.. என்ன செய்வார் ஆளுநர்?
என் தேவியின் கை.. என் நெற்றியில் பட்டால் .. அவளின் (ல்) அவன்! (13)
தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!
தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்
மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்
தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்
நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!
{{comments.comment}}