2024-25ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்.. தாக்கல் செய்தார்.. மேயர் பிரியா ராஜன்!

Feb 21, 2024,10:47 AM IST

சென்னை: 2024 -25 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். பல்வேறு அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை அறிவித்து பட்ஜெட்டை வாசித்து வருகிறார் மேயர் பிரியா.


நடபாண்டில் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம் (19.2.24)சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். 2024- 25 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணில் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது




இந்த நிலையில் இன்று சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார்.  சென்னை மாநகர மேயர் ஆர் பிரியா ராஜன். இவர்  மேயராகப் பதவியேற்ற குறுகிய காலகட்டத்தில் 2022 -2023ஆம் நிதி ஆண்டுக்கான  பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் இந்த பட்ஜெட்டில் மக்களைத் தேடி மேயர் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.


இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் ரிப்பன் மாளிகை கூடரங்கில் இன்று காலை 10 மணி அளவில் தாக்கல் செய்தார். இதில் பள்ளி கல்வித்துறை, விளையாட்டுத்துறை, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.பிப்ரவரி 22ஆம் தேதி இந்த பட்ஜெட்டுக்கான விவாதம் நடைபெற உள்ளது. 

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்