சென்னை: 2024 -25 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். பல்வேறு அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை அறிவித்து பட்ஜெட்டை வாசித்து வருகிறார் மேயர் பிரியா.
நடபாண்டில் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம் (19.2.24)சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். 2024- 25 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணில் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது

இந்த நிலையில் இன்று சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். சென்னை மாநகர மேயர் ஆர் பிரியா ராஜன். இவர் மேயராகப் பதவியேற்ற குறுகிய காலகட்டத்தில் 2022 -2023ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் இந்த பட்ஜெட்டில் மக்களைத் தேடி மேயர் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் ரிப்பன் மாளிகை கூடரங்கில் இன்று காலை 10 மணி அளவில் தாக்கல் செய்தார். இதில் பள்ளி கல்வித்துறை, விளையாட்டுத்துறை, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.பிப்ரவரி 22ஆம் தேதி இந்த பட்ஜெட்டுக்கான விவாதம் நடைபெற உள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}