மதுரை அரசாளும் மீனாட்சி.. சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. விழாக் கோலத்தில் மாமதுரை!

Apr 21, 2024,09:10 AM IST

மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தேறியது. இதையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. மதுரையில் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து லட்சம் பேருக்கு கல்யாண விருந்துக்கும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


அங்கயற்கண்ண, ஆலவாய் அம்மன் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மீனாட்சியின் ஆட்சியில் மதுரை மாநகரம் காலாகாலமாக செழித்தோங்கி வருகிறது. அந்த அம்மனுக்கு இன்று திருக்கல்யாணம். அருள்மிகு சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்மனுக்கும் இந்தத் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடந்தேறியது.




தமிழ்நாட்டுத் திருவிழாக்களில் மிகுந்த பிரசித்தி பெற்ற விழாவாக மதுரை சித்திரை திருவிழா கருதப்படுகிறது. 12 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் தான். லட்சோபம் லட்சம் மக்கள் திரண்டு வந்து அம்மனைத் திருமணக்கோலத்தில் கண்டு மகிழ்ந்து அவளது அருள் பெற்று மகிழ்வார்கள்.


பட்டாபிஷேகம் முடிந்ததும் மீனாட்சியின் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கோவிலின்  வடக்கு மேற்கு வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று காலை காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.  அம்மனுக்கு திருமணம் நடந்த அதே தருணத்தில் மண்டபத்தில் கூடியிருந்த பெண்களும் தங்களது தாலிச் சரடுகளை மாற்றிக் கொண்டனர். அதேபோல வீடுகளிலும் பெண்கள் தாலிச் சரடு மாட்டிக் கொண்டனர். 


அறுசுவை விருந்து


அம்மனுக்கு திருக்கல்யாணம் நடப்பதையொட்டி இன்று மதுரையில் மாபெரும் அறுசுவை திருமண விருந்துக்கும் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடை, பாயாசத்துடன் கூடிய விருந்து லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


திருக்கல்யாண வைபவத்தையொட்டி மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. மதுரையில் உள்ள அத்தனை பேர் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் உள்ள அத்தனை பெண்களின் கண்களும் இன்று மீனாட்சி அம்மன் கோவில் பக்கமே திரும்பியிருந்தது. திருக்கல்யாண வைபத்தையொட்டி கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவலுக்கு வந்திருந்த பல பெண் காவலர்களும் கூட இன்று தாலிச் சரடுகளை மாற்றிக் கொண்டைக் காண முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்